இந்தி திரையுலகைப் பொறுத்தவரையில் வாரிசு நடிகர்கள் நடிகைகள் ஆதிக்கம் இருப்பதாக பல குற்றச்சாட்டுக்கள் வெளிவந்த வண்ணம் தான் இருக்கின்றன. அதுமட்டுமல்லாது வெளியில் இருந்து வருகின்ற இளம் நடிகர், நடிகைகளை வளர விடாமல் அவர்கள் தடுப்பதாகவும் ஏற்கனவே பலர் குற்றம்சாட்டி உள்ளனர்.
அந்தவகையில் நடிகை பிரியங்கா சோப்ராவும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் "இந்தி பட உலகில் என்னை ஓரம்கட்ட ஒரு கும்பல் தீவிரமாக சதி செய்தது. அவர்கள் செய்த அரசியலை என்னால் சிறிதும் தாங்க முடியவில்லை. அதனாலேயே இந்தி படங்களில் நடிக்காமல் ஹாலிவுட்டுக்கு போனேன்'' என்று வெளிப்படையாக கூறினார். இவரின் உடைய இந்த குற்றச்சாட்டுக்கு கங்கனா ரணாவத், மீரா சோப்ரா உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது தமிழில் 'யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இந்தி நடிகை நீது சந்திராவும் இந்தி பட உலக வாரிசுகள் ஆதிக்கத்தை வன்மையாக கண்டித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் "இந்த பிரச்சினை ஒருவருக்கு மட்டும் இல்லை. எல்லோருக்குமே இதே நிலைமைதான் இந்தி சினிமாவில் இருக்கிறது. சினிமா குடும்பத்தை சேர்ந்த வாரிசாக நீங்கள் இல்லை என்றால் பட வாய்ப்புக்காக ரொம்பவே போராட வேண்டும். ஏதேனும் வாய்ப்பு கிடைத்தாலும் அது நீண்ட கால தாமதத்துக்கு பிறகே தான் கிடைக்கும். இதை பிரியங்கா உள்பட பலர் நிஜ வாழ்க்கையில் உணர்ந்து இருக்கிறார்கள். ஆனால் இதுபற்றி பகிரங்கமாக பேச யாரும் முன் வருவது இல்லை'' என்று ஓப்பனாக தெரிவித்துள்ளார்.
Listen News!