பிக்பாஸ் சீசன் 6ஆனது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்ற அதே நிலையில் அங்கு அமுதவாணன், ஜனனி ஆகியோரின் செயற்பாடுகளும் பலராலும் கவனிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் ஜனனி அமுதவாணனின் பகடைக்காயாக இருக்கிறார், அமுதவாணனும் டாமினேட் செய்கிறார் என்கிற வாதத்தை பற்றி கமல் கூட வார இறுதி எபிசோட்டில் கேட்டிருந்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கமல்ஹாசன் தனலட்சுமியின் மோசடித்தனத்தை குறிப்பிட்டு சுட்டிகாட்டியபோது அமுதவாணன் உள்ளிட்ட மற்றவர்களையும் வன்மையாகக் கண்டித்தார். அதாவது மோசடிக்கு துணையாக இருப்பதும் குற்றமே என்று தெரிவித்தார். கமல் இவ்வாறு கூறியதும் அமுதவாணன் கடும் அப்செட்டானார்.
அதுமட்டுமல்லாது இருவருடைய நெருக்கம் பற்றி ஹவுஸ்மேட்ஸ்கள் அங்கங்கே பல விமர்சனங்களை வைத்தாலும், கமல்ஹாசன் கண்டித்தாலும் ஜனனி, அமுதவாணன் இருவரும் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதாக இல்லை.
நேற்று கமல்ஹாசன் சென்ற பின் இருவரும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அதில் ஜனனி-அமுதவாணனை டாமினேட் செய்து கொண்டிருந்தார். இருவருமே தாங்கள் செய்யும் தவறை கொஞ்சம் கூட உணரவில்லை. தாங்கள் செய்வது தான் சரி என்ற நினைப்பில் நிறையவே பேசிக் கொண்டிருந்தனர்.
மேலும் அமுதவாணன் தன் இயல்பை விட்டு அச்சு அசல் ஜனனியின் கைப்பாவையாக மாறி வருவதை இது காண்பிக்கிறது. அமுதவாணன் தான் ஜனனியை ஆப்ரேட் செய்கிறார் என்று மற்றவர் சொன்னாலும், ஜனனிதான் அமுதவாண்னை முழுதாக இயக்குகிறார் என்பதுதான் உண்மை. கிட்டத்தட்ட ஜனனியின் கட்டுப்பாட்டில் அமுதவாணன் இருக்கிறார் என்பது போல் தான் இருவரின் நடத்தையும் இருந்தது.
இதனைத் தொடர்ந்து இவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்பது போல் ஷிவின் அவர்களை பார்த்து பேசி விட்டு சென்றார். அமுதவாணன் தொடர்ச்சியாக இதேபோன்று நடந்தால் அவர் பிக்பாஸ் வீட்டில் சிக்கலை தேடிக்கொள்வார் என தெரிகிறது.
Listen News!