• Sep 21 2024

ரஜினி முதல் சூர்யா வரை... மகேஷ் பாபுவின் தந்தைக்கு இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்... என்ன கூறியுள்ளனர் தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் மூத்த நடிகராகவும், பிரபல தயாரிப்பாளராகவும் மற்றும் இயக்குநராகவும் வலம் வந்தவர நடிகர் கிருஷ்ணா. நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையான இவர் இன்று காலமானார். இவரின் இந்தத் திடீர் மறைவானது இந்திய திரையுலகிற்கே பேரிழப்பாக பலராலும் பார்க்கப்படுகிறது. 

அந்தவகையில் அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலினைத் தெரிவித்து உள்ளனர். அதில் யார் யார் என்ன கூறியுள்ளார்கள் எனப் பார்ப்போம். 


இவரின் மறைவு குறித்து ரஜினிகாந்த் தன்னுடைய டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது "கிருஷ்ணாவின் மறைவு தெலுங்கு திரையுலகிற்கு பேரிழப்பு. மூன்று படங்களில் அவருடன் பணியாற்றிய நினைவுகளை எப்போது என் நினைவில் இருக்கும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளதாவது "தெலுங்கு சினிமாவின் அடையாளமாக இருந்த கிருஷ்ணாவின் மறைவால் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. அண்ணன், அம்மா தற்போது தந்தை என மூன்று இழப்புகளை சந்தித்துள்ள மகேஷ்பாபுவுடன் துக்கத்தை பகிர்ந்து கொள்கிறேன். ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


அதுபோன்று சூர்யா கூறுகையில் "கிருஷ்ணா அவர்களுக்கு எங்கள் பிரார்த்தனைகளும் மரியாதைகளும், மகேஷ் பாபுவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எங்கள் அன்பும், வலிமையும் கலந்த இரங்கல்கள். இது உங்களுக்கு கடினமான ஆண்டாக அமைந்துள்ளது மகேஷ், நாங்கள் உங்களோடு இருக்கிறோம்" என மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.


இவர்களைப் போலவே கார்த்தி தெரிவித்துள்ளதாவது "பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை மகிழ்வித்த கிருஷ்ணா அவர்கள், எப்போதும் எங்கள் மனதில் இடம்பெற்று இருப்பார். முழுமையான வாழ்க்கையை வாழ்ந்த சூப்பர் ஸ்டார் அவர். இது உங்களுக்கு கடினமான ஆண்டாக அமைந்தாலும், மனவலிமையுடன் இருங்கள் மகேஷ் பாபு" என அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement