பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 9ஆம் தேதி ஆரம்பமாகி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா என 4 பேர் வெளியேறிவிட்டார்கள்.
மேலும் இந்த வார இறுதியில் யார் வெளியேறுவார் என்பது தெரியவில்லை. ரசிகர்கள் ஒருவரை தான் நினைக்கிறார்கள், ஆனால் யார் வெளியேறுவார் என்பது கமல்ஹாசனிடம் தான் உள்ளது.
இவ்வாறுஇருக்கையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜி.பி.முத்து குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடுவது, தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என பிஸியாகவே உள்ளார்.
தற்போது என்னவென்றால் ஜி.பி.முத்து விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலான தென்றல் வந்து என்னை தொடும் தொடர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார். அந்த சீரியல் நடிகர்களுடனும் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் ஜி.பி.முத்து இந்த தொடரில் நடிக்கிறாரோ என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்...
Listen News!