சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் பல ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்று வருவதோடு வசூலிலும் அள்ளிக் குவித்து வருவதுண்டு. அந்த வகையில் அண்மையில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றிபெற்றுள்ள திரைப்படம் தான் காந்தாரா.
கன்னடத்தில் உருவான இப்படம் முதலில் கன்னட மொழியில் மட்டுமே வெளிவந்தது. அதன்பின் மக்களால் கன்னட மொழியில் அதிகமான ரசிக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு என மற்ற மொழிகளிலும் வெளிவந்தது.
இந்தியளவில் கே.ஜி.எப் படத்திற்கு கிடைத்த அளவிற்கு காந்தாரா படத்திற்கும் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி என்பவரே இயக்கி நடித்திருந்தார்.
இந்நிலையில், நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டி தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.இந்தப் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருவதையும் காணலாம்.
Listen News!