• Sep 20 2024

ஜீவானந்தத்துடன் கூட்டுச் சேர்ந்த கௌதம்- கோபப்பட்டு கத்திய குணசேகரனுக்கு நடந்த பரிதாபம்- அதிர்ச்சியில் ஜனனி

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் ஆதிரையின் திருமணம் யாரும் எதிர்பாராத விதமாக கரிகாலனுடன் நடந்து விட்டது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதனை அடுத்து தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது அப்பத்தாவின் சொத்தின் 40 வீதப் பங்கை குணசேகரனிடமிருந்து ஜீவானந்தம் பறித்து விட்டார்.இதற்காக ஜுவானந்தத்திடம் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக ஜனனி, குணசேகரன் எல்லோரும் போய் இருக்கின்றனர்.


இப்படியான நிலையில் ஜீவானந்தத்துடன் பேசிக் கொண்டிருக்கும் போது கௌதமும் வந்து சேர்ந்ததால் ஜனனியும் அதிர்ச்சியடைகின்றார். அப்போது ஜனனி கௌதம் நீ இங்க என்ன பண்ணுற என்று கேட்ட போது 40 வீதம் சொத்தில் பங்கு எங்களுக்கு தான் என்று சொல்ல குணசேகரன் கோபப்படுகின்றார்.

அத்தோடு குணசேகரன் ஒரு ஆணியைக் கூட உங்களால் புடுங்க முடியாது என்று சொல்ல ஜீவானந்தம் ஆட்களை வைத்து குணசேகரனை துாக்கிச்  செல்ல மற்றத் தம்பிமாரும் ஜனனியும் அதிர்ச்சியடைகின்றனர். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement