சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்று 'கயல்'. இந்த சீரியலானது டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மையான ஒரு இடத்தைப் பிடித்திருக்கின்றது.
இந்த சீரியலில் தற்போது சிவசங்கரியின் சூழ்ச்சிக்கு ஏற்ப கௌதம் கயலைக் கடத்தி வைத்திருக்கின்றார். இந்நிலையில் ஸ்பெஷல் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது.
அதில் கௌதம் கயலைக் கழுத்தில் கயிறு கட்டித் தொங்கவிட்டுள்ளார். ஆனால் எழிலோ அங்கும் இங்கும் கயலைக் காணாது தேடி அலைகின்றார்.
இறுதியில் ஒருவரிடம் சென்று பேசுகின்றார். அவர் ஒரு மொபைல் நம்பரைக் கொடுக்கின்றார். அந்த நம்பருக்கு எழில் போன் பண்ணுகின்றார். அப்போது கௌதம் கும்பலிலிருந்து ஒருவர் அந்தப் போனை எடுக்கின்றார்.
இவ்வாறாக இந்த ப்ரோமோ வெளிவந்துள்ளது. இதனையடுத்து என்ன நடக்கும், கயல் உயிர் பிழைப்பாரா..? இல்லையா..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!