• Sep 21 2024

"என் பொண்டாட்டி அப்பிடி இருந்தால் உங்களுக்கென்ன".. கடுங் கோபத்தில் கூறிய கவுதம் கார்த்திக்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவில் நுழைந்து குறுகிய காலத்திலேயே தமக்கென ஒரு தனி அடையாளத்தைப் பிடித்துக் கொண்டவர்கள் தான் நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டனர்.


அந்தவகையில் 'தேவராட்டம்' என்ற படத்தில் மஞ்சிமா மோகனும் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடித்தனர். அந்த சமயத்தில் தான் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இதனைத் தொடர்ந்து சில ஆண்டுகள் காதலித்து வந்த இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். 


மஞ்சிமா மோகன் சற்று உடல் எடை கூடியவர். இதனால் திருமணத்திற்கு முன்பே சமூக வலைதளங்களில் பலருடைய கேலி கிண்டலுக்கு ஆளாகி வந்தார். அதுமட்டுமல்லாது திருமணத்திற்கு பிறகும் அந்த கேலி கிண்டல்கள் அவரைப் பின்தொடர்ந்து வந்தன.


இந்நிலையில் மஞ்சிமா மோகன் மற்றும் கவுதம் கார்த்திக் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளனர். அதன் போது "உங்களின் மனைவி உடல் எடை குறித்து வரும் பாடி ஷேமிங், கிண்டல், கேலிகளுக்கு ஒரு கணவராக உங்கள் மனைவிக்கு என்ன சொல்வீர்கள்" என்று கேள்வி கேட்டிருந்தனர்.

அதற்கு பதிலளிக்கையில் "என் மனைவி குண்டாக இருப்பதால் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்ட கவுதம் கார்த்திக், இதை பற்றி மஞ்சிமாவுக்கு எதுவும் நான் சொல்லத்தேவை இல்லை. மஞ்சிமா மிகவும் தைரியசாலி, உடல் பருமன் குறித்த கேலி, கிண்டல்களை அவர் இப்போது எதிர்கொள்ளவில்லை. அது எப்போதோ நடந்து விட்டது" என்றார்.


மேலும் "தனது உடல் எடை குறித்து யாராவது ஏதாவது பேசினால் பாவம் அவர்களுக்கு கண்னை தவிர வேறு எதுவுமே தெரியவில்லை என கூறுவார். தனக்கு எது மகிழ்ச்சியோ அதில்தான் மஞ்சிமா முழுவதுமாக கவனம் செலுத்துவார். மஞ்சிமா ஆசைப்படும் அத்தனையும் செய்ய வேண்டும் என்றுதான் நான் நினைப்பேன், அதுதான் அவருக்கு மகிழ்ச்சி" எனவும் கூறியுள்ளார் கவுதம் கார்த்திக்.

Advertisement

Advertisement