தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகளிற்கு எந்தளவிற்கு ரசிகர் கூட்டம் இருக்கின்றதோ அந்தளவிற்கு சில இயக்குநர்களின் படங்களிற்கெனவும் ரசிகர் பட்டாளம் இருக்கின்றது.
அதில் வாசு, ஷங்கர், ஹரி எனப் பலரையும் குறிப்பிட்டுக் கூற முடியும். இவர்கள் அனைவரும் ஆக்ஷன் படங்கள், காதல் படங்கள், நகைச்சுவைப் படங்கள் எனப் பல வகையில் படங்களை இயக்கக் கூடிய திறமை கொண்டவர்களாக விளங்கி வருகின்றார்கள்.
அந்த வகையில் ரொமான்டிக்கான காதல் படங்களை இயக்குவதில் சில இயக்குனர்களே மக்கள் மனதில் இன்றுவரை நிலைத்து நின்று கலக்கி வருவார்கள். அந்த லிஸ்ட்டில் டாப்பில் இருப்பது கௌதம் வாசுதேவ் மேனன்.
இவரது இயக்கத்தில் வெளிவந்த அனைத்துப் படங்களுமே ரொமான்டிக்காக கதையம்சத்தைக் கொண்டதாகத்தான் இருக்கும். இந்நிலையில் தற்போது இவர் சிம்புவை வைத்து 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அப்படத்தின் ரிலீஸிற்காக சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.
இவரைப் போன்றே நடிகர் விஜய்யும் தற்போது 'வாரிசு' படத்தின் படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கிறார். இதுவரை படத்தின் ஃபஸ்ட் லுக்குகள் மட்டுமே வந்துள்ளது. அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றார்கள்.
இந்நிலையில் கௌதம் மேனன் சமீபத்தில் தனது படங்கள் குறித்து பேட்டி ஒன்றினைக் கொடுத்துள்ளார். அதில் விஜய்யுடன் இணைவது குறித்தும் பேசியிருக்கின்றார். அதாவது "முதலில் விஜய்யை வைத்து ஆக்ஷன் திரைப்படம் இயக்க ஆசைப்பட்டேன். ஆனால் இனி அவரை இயக்க வாய்ப்பு கிடைத்தால் அழகான காதல் கதை தான் இயக்குவேன்" எனக் கூறியுள்ளார்.
நம்ம தளபதி விஜய் எந்த காதல் படத்தில் நடித்தாலும் அப்படம் மக்கள் மனதில் நீங்காத இடத்தினைப் பிடித்து விடும். இந்த நிலையில் தற்போது கௌதம் வாசுதேவ் மேனனும் அவரை வைத்து காதல் படத்தை இயக்குவதாக கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் இப்போதிருந்தே எதிர்பார்ப்பை தூண்டி விட்டிருக்கின்றது.
அதுமட்டுமல்லாது "அடடா காதல் படமா?, அழகாக இருக்குமே" என ரசிகர்கள் இப்போதே அந்த படத்தை பற்றி யோசிக்கவும் ஆரம்பித்து விட்டார்கள்.
Listen News!