'மாநாடு' படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்த படத்தை இயக்குநர் கௌதம் மேனன் இயக்கியிருந்தார்.
ஏற்கனவே சிம்புவை வைத்து இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான, 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய இரண்டு படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 'வெந்து தணிந்தது காடு' படத்திற்கும் வேற லெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்தது.
பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம் சார்பில் தயாரித்திருந்த இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக சுத்தி இத்னானி நடித்திருந்தார்.வழக்கமாக காதல் கதைகளையே மிகவும் சுவாரஸியமாக இயக்கும் கௌதம் மேனன், சிம்புவை வைத்து இப்படத்தை மிகவும் வித்தியாசமான இயக்கியிருந்தார்.
இதனை அடுத்து தற்பொழுத சிம்பு பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக்கும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். இப்படம் விரைவில் வெளியாகவும் காத்திருக்கின்றது.இப்படத்தைத் தொடர்ந்து சிம்பு நடிக்கும் எந்தப் படத்தின் அப்டேட்டும் வெளியாகவில்லை.
வெந்து தணிந்தது காடு வெளியாகியிருந்த வேளை அதன் பாகம் 2 வரும் என்று கூறப்பட்டது. ஆனால் கௌதம் வாசு தேவனிடம் இருந்தோ அல்லது சிம்புவிடம் இருந்தோ இது குறித்த எந்த தகவலும் வெளியாகாததால் ரசிகர்கள் கடும் குழப்பத்தில் இருக்கின்றனர்.தனால் வெகு சீக்கிரத்தில் சிம்பு நல்ல அப்டேட் தருவார் என்றும் காத்திருக்கின்றார்கள்.
Listen News!