சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்று 'கயல்'. இந்த சீரியலானது டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மையான ஒரு இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த சீரியலானது தற்போது கயலுக்கும் எழிலுக்கும் திருமணம் நடைபெறுமா.? என்கிற பரபரப்புடன் நாளுக்கு நாள் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் கயல் செய்த தப்புக்கு மரியாதையாக ஆனந்தி காலில் விழுந்து மன்னிப்புக் கேட்குமாறு கௌதமை மிரட்டுகின்றார்.
மறுபுறம் எழிலின் தாயார் சிவசங்கரி கயலை கடத்தி விடுமாறு கௌதமிற்கு அறிவுரை வழங்கியமையை அடுத்து கௌதமும் கயலை தனது அடியாட்கள் மூலம் கடத்துகிறார்.
அந்தவகையில் வாயில் துணியைப் பொத்தி அவரை கடத்தி ஒரு வீட்டிற்குள் அடைத்து வைக்கிறார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. இதனால் எழிலுக்கும் கயலுக்கும் திருமணம் நடைபெறாதா..? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.
Listen News!