• Sep 20 2024

வளைகாப்பு நிகழ்வை கோலாகலமாகக் கொண்டாடிய கயல் சீரியல் நடிகை- குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் கயல். இந்த சீரியலில் சைத்ரா செட்டி மற்றும் சஞ்சீவ் ஆகியோர் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் ஃபேன்ஸ் கூட்டம் உண்டு. 

அந்த வகையில் இந்த சீரியலில் கயலின் கடைசி தங்கையாக ஆனந்தி ரோலில் நடித்து வருபவர் தான் அபிநயா.இவர் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வரும் தீபக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர் கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பான திருமணம் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனார்.


திருமணத்திற்கு பிறகும் இருவரும் தங்களது கெரியரில் கவனம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அபிநயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெட்டர்னிட்டி புகைப்படத்தை பகிர்ந்து தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களுடன் ஷேர் செய்தார். அப்போது தான் இத்தனை நாட்களாக் அபிநயா கயல் சீரியலில் வயிறை மறைத்துக் கொண்டு நடித்தார் என்பது பலருக்கும் தெரிய  வந்தது. 

ஆல்யா, ஃபரீனா வரிசையில் அபிநயாவும் கர்ப்பமாக இருந்துக் கொண்டே சீரியலில் நடித்தார்.இந்நிலையில் அபிநயாவுக்கு சில நாட்களுக்கு முன்பு வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. இதை புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளன. வளைகாப்பை தொடர்ந்து அபிநயா தொடர்ந்து சீரியலில் நடிப்பாரா? என்ர கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. அவரின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அபிநயா சீரியலில் இருந்து விலகலாம் என்ற தகவலும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.







Advertisement

Advertisement