• Sep 20 2024

இயக்குநர் ஷங்கர் செய்த காரியத்தால் தேம்பித் தேம்பி அழுத ஜெனிலியா- நடந்தது என்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படுபவர் தான் ஷங்கர்.ஜென்டில் மேன் என்ற மாஸ் வெற்றிப்படத்தை கொடுத்து திறமையான இயக்குநர் என்று பெயர் எடுத்தார்.இந்தபடத்தை தொடர்ந்து பிரபு தேவாவை வைத்து காதலன் என்ற படத்தை இயக்கி அனைவருக்கும் பிடித்தமான இயக்குநராக மாறினார்.

இதனை அடுத்து பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரமாண்ட இயக்குநராக வலம் வந்தார். இவரது இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் பாய்ஸ்.இந்நிலையில் பாய்ஸ் படத்தில் நடந்த சுவாரசியமான சம்பவம் குறித்து ஷங்கர் பேசிய விடயம் ஒன்று வெளியாகி வருகின்றது. அந்த வீடியோவில், இப்படத்தில் கதாநாயகியாக நடித்த ஜெனிலியாவுக்கு தமிழ் தெரியாததால், டயலாக் பேப்பரை பார்த்து அதிர்ச்சி அடைந்துவிடுவாராம்.


இப்படித்தான், ஒருநாள் இரண்டு பக்க கடினமான டயலாக் பேப்பரை ஜெனிலியாவிடம் கொடுத்துவிட்டார். அப்போது அந்த பேப்பரை பார்த்த ஜெனிலியா அழ துவங்கிவிட்டார். இதைப்பார்த்ததும் எனக்கே பதற்றமாகி விட்டது. பிறகு விசாரித்தால், வசனத்தைப் பார்த்து அழுதார் என்பது தெரிகிறது. நான் தான் அவரை சமாதானம் செய்து வசனங்களை சொல்லி கொடுத்தேன் என்றார்.

மேலும் ஷங்கர் தற்பொழுது கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.








Advertisement

Advertisement