• Sep 20 2024

சீக்கிரம் தயாராகுங்கள்- அப்படி ஒரு திட்டமும் முதலில் இல்லை- தொடர்ந்து சஸ்பென்ஸ் வைத்த பகத் பாசில்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக அனைத்து மொழிகளிலும் வெளியாகும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் அனைத்தும் பான் இந்தியத் திரைப்படங்களாகவே வெளியாகிக் கொண்டிருக்கின்றது.இவ்வாறான ஒரு பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகிய திரைப்படம் தான் புஷ்பா.

இப்படத்தில் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடன் ராஷ்மிகா மந்தானா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தின் இசைப் பணிகளை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டார்.

இவர் இசையில் வெளியான அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக சமந்தா சிறப்புத் தோற்றத்தில் நடனமாடிய 'ஊ…சொல்றியா மாமா' பாடலை இளைஞர்கள் கொண்டாடித் தீர்த்தனர். செம்மர மரம் கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை படக்குழு அடுத்தாண்டு வெளியிட திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் ப சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஃபகத், “முதலில் புஷ்பா படத்தின் கதையை வெப் சீரியஸாக எடுக்கத்தான் இயக்குநர் திட்டமிட்டிருந்தார். பிறகு அந்த முடிவை மாற்றிக் கொண்டார். முதலில் என்னிடம் கதை சொல்லும் போது ’புஷ்பா 2’ எடுக்கும் எண்ணம் எல்லாம் இயக்குநர் சுகுமாருக்கு இல்லை. என்னை வைத்து காவல் நிலைய காட்சிகளை படமாக்கிய பின்புதான் அவருக்கு புஷ்பா 2 எடுக்கும் எண்ணம் உதித்தது.

சமீபத்தில் இயக்குநருடன் பேசும் போது புஷ்பா படத்தின் கதை அதிகம் இருப்பதாலும், செம்மரக் கடத்தலை மிக ஆழமாக சொல்ல இருப்பதாலும் புஷ்பா படத்தின் மூன்றாம் பாகத்திற்கு தயாராக இருங்கள் என கூறினார்” என்று அந்தப் பேட்டியில் தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement