2009 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் படிக்காதவன். இந்த படத்தை இயக்குநர் சுராஜ் இயக்கினார். இதில் மிக முக்கியமான ரௌடி கதாபாத்திரத்தில் விவேக் நடித்திருப்பார். ஆனால் விவேக்கிற்கு முன்பே அந்த கதாபாத்திரத்தில் வடிவேலுதான் நடிக்க இருந்தார்.
ஆனால் படத்தில் சில காட்சிகள் வடிவேலுவிற்கு பிடிக்கவில்லை என்பதால் அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை. இந்த நிலையில் படத்தில் விவேக் நடிக்க துவங்கியபோது வழக்கமாக விவேக் பேசும் தோணியிலேயே பேசி கொண்டிருந்தார்.
அது சுராஜ்க்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. எனவே விவேக்கை தனியாக அழைத்த சுராஜ். சார் வழக்கமா நீங்க நடிக்கிற மாதிரி கதாபாத்திரம் இது இல்ல. இதுல கொஞ்சம் வெரப்பா இருக்கணும். நீங்க சிரிக்க கூடாது, உங்களை பார்த்து மக்கள்தான் சிரிக்கணும். அதனால் பேசும்போது கூட திமிராவே பேசுங்க” என கூறியுள்ளார்.
சரி என்று விவேக்கும் அதே மாதிரியே பேசியுள்ளார். விவேக்கின் அந்த விதமான கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. படம் வெளியான பிறகு பலரும் படத்தின் நகைச்சுவை காட்சிகள் குறித்தே பேசிக்கொண்டிருந்ததற்கு இயக்குநரே காரணமாக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!