நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 வருடமாக காதலித்து வந்த நிலையில் நேற்று இவர்களின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. தற்போது சமூகவலைத்தளம் முழுவதும் பேசப்பட்டு இருக்கும் ஒரே விஷயம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் தான்.
இவ்வாறு இருக்கையில் இவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 100 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர். மேலும், நயன்தாராவின் திருமணத்திற்காக மும்பையில் இருந்து மேக்கப் ஆர்டிஸ்ட் வந்து இருந்தார். எனினும் குறிப்பாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்டவர்களுக்கு மேக்கப் ஆர்டிஸ்ட் பணிபுரிந்தவர் தான் நயன்தாராவுக்கும் மேக்கப் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த திருமணத்தில் இரு வீட்டாரும், அவருடைய நெருங்கிய நண்பர்களும், சில முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர். திருமணத்தில் வெளியாட்கள் யாரும் பங்கேற்பதற்கு அழழைப்பு விடுக்கப்படவில்லை.. திருமணத்திற்கு வருபவர்கள் அழைப்பேசி, கேமரா உள்ளிட்டவைகளை கொண்டு செல்ல அனுமதி இல்லை. முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்ட நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள்.
நேற்று திருமணம் முடிந்த நிலையில் இன்று விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வந்தார்கள்.
இந்நிலையில் இந்த திருமணத்திற்கு வருகை தந்தவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பரிசளித்தாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த புகைப்படமும் இணையத்தில் ரசிகர்களை ஆச்சர்யப் படுத்தியுள்ளது.
பிற செய்திகள்:
- சமந்தா செய்யும் வேறொரு தொழில்-சினிமாவை தாண்டி கோடிக்கணக்கில் வருமானம்-என்ன தெரியுமா..?
- நடிகை பிரணிதாவிற்கு குழந்தை பிறந்தாச்சு-ஆணா..பெண்ணா…? இதோ புகைப்படம்..!
- பூஜா ஹெக்டேவிற்கு இத்தனை மொழி தெரியுமா..? அட இவ்வளவு நாளும் தெரியாம போச்சே..!
- விஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கு லோகேஷ் இறக்கும் முன்னணி நடிகர்-அதுவும் எந்த கதாப்பாத்திரத்திற்கு தெரியுமா..?
- நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண செலவு மட்டும் இத்தனை கோடியா…சொக்கிப்போன ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!