• Sep 20 2024

அவருக்கு ரெட் காட் கொடுங்க அப்போ தான் நிகழ்ச்சி விளங்கும்- அசீமை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6 ஒன்பது வாரங்களை கடந்து  சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது. கடந்த வாரம் நடந்த கதாபாத்திர டாஸ்கில் சிறப்பாக செயல்பட்ட அமுதவாணன், மைனா, ரச்சித்தா ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் மைனா தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த வாரத்திற்கான நாமினேஷனில்  ஜனனி, ஏடிகே, அசிம், விக்ரமன், மணி மற்றும் ரச்சிதா ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.தற்போது இந்த வாரத்திற்கான சொர்க்கமா..நரகமா டாஸ்க் நடந்து வருகிறது. இதற்காக வீட்டில் உள்ளவர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து உள்ளனர். 


கார்டன் ஏரியாவில் நடைபெறும் இந்த டாஸ்கிற்காக வீட்டில் சிறி கூண்டு வடிவில் ஜெயில் அமைக்கப்பட்டுள்ளது. காலையில் வெளியான முதல் ப்ரோமோவில் நரகத்தில் அதிக நேரம் சைக்கிள் பேடலில் செய்பவர் சொர்க்கத்திற்கு வரலாம், அதேபோல குறுக்குவழியில் சிறிய கூண்டை திறந்து கொண்டும் சொர்க்கத்திற்கு செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில் அசீமுக்கும் அமுதவாணனும் சண்டை போட்டுக்கொள்கின்றனர். ஜனனி மற்றும் தனலட்சுமிக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்துக்கொண்டே இருந்தால் எப்படி என அசீம் கேட்க இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. 


இதனால் அசீம் எந்த விளையாட்டையும் விளையாட விடுவதே இல்லை என்றும், கேட்டால் என்னைப் பிடிக்காதவங்க வீட்ல இருக்கலாம். ஆனா என்னைப் பிடிச்சவங்க வெளில கோடி பேரு இருக்காங்க என்று பேசுகிறார்.இதனால் இவரை ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பினால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி விளங்கும் என சிலர் விமர்சித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement