• Sep 20 2024

நீங்க போய் செக் பண்ணி பாருங்க- பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர்களிடம் கோபப்பட்ட ஐஸ்வர்யா ராய்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லக்‌ஷ்மி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தின் நடிப்பில் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ளதிரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளதோடு முக்கிய வேடங்களில் அதாவது ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர்.

 

இந்த நிலையில் தற்பொழுது இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது மிகவும் பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்று வருகின்றது.இதற்கு  சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த் - கமல் ஹாசன் இருவரும் கலந்துக் கொண்டுள்ளனர்

இதற்கிடையே விழாவில் கலந்துக் கொள்ள வந்த நடிகை ஐஸ்வர்யா ராய், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தப் படத்தில் நடித்தது பெருமையாக இருப்பதாகவும், மணி சாருடன் மீண்டும் இணைந்து வேலை செய்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டார்.அப்போது செய்தியாளர் பக்கமிருந்து, மணிரத்னத்துடன் இது உங்களுடைய இரண்டாவது படம், இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்ற குரல் கேட்டது. அதற்கு, “இரண்டாவது படமா? நான் அவருடன் நிறைய படங்களில் பணிபுரிந்து விட்டேன். நீங்கள் குழப்பத்தில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன், போய் செக் செய்து பாருங்கள்.


 மணி சாரின் இருவர் படத்தின் மூலம் தான் எனது கரியர் ஆரம்பமானது. பின்னர் குரு, அதற்கடுத்து ராவணன், இப்போது பொன்னியின் செல்வன்” என இயக்குநர் மணிரத்னத்துடன் தான் இணைந்து பணிபுரிந்த படங்களை பட்டியலிட்டார் ஐஸ்வர்யா ராய் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement