• Sep 20 2024

இலங்கை தமிழர்களுக்காக ‘கோட்’ ரிலீஸ் தேதி மாற்றப்படுகிறதா? ஆச்சரிய தகவல்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்து வரும்கோட்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை இன்னும் ஒரிரு மாதத்திற்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விடுமுறை தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர் என்றும் அதை நோக்கி தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஒரு பக்கம் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கும் போது இன்னொரு பக்கம் இந்த படத்தின் கிராபிக்ஸ் உட்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஜூலை இறுதியில் இந்த படத்தின் ஒட்டுமொத்த பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிவிடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் சில தெலுங்கு பிரபலங்களின் படங்கள் வர உள்ளதால் திட்டமிட்டபடிகோட்படத்தை  ரிலீஸ் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தற்போது இன்னொரு சிக்கலும் எழுந்துள்ளது.

 
பொதுவாக விஜய் படங்களுக்கு வெளிநாட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என்பதும், குறிப்பாக வெளிநாட்டில் வாழும் இலங்கை தமிழர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பது தெரிந்தது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் ஐரோப்பிய நாடுகளில் விடுமுறை காலம் என்பதால் அங்குள்ள இலங்கை தமிழர்கள் சொந்த நாடான இலங்கைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் இந்த படம் வெளியானால் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் பார்க்க வசதியாக இருக்காது என்றும் அதனால் ஐரோப்பிய நாடுகளில் படத்தின் வசூல் மிகவும் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்த தகவல் படக்குழுவினர்களின் கவனத்திற்கு வந்த போது அவர்கள் ரிலீஸ் செய்தியை மாற்றலாமா என்று திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை தினத்தில் இந்த படத்தை வெளியிடலாமா என்று ஆலோசனை செய்து கொண்டிருப்பதாகவும் விரைவில் இது குறித்த முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement