• Sep 20 2024

பாக்கியாவை புதிய பிரச்சினையில் மாட்டி விட்ட கோபி- பதிலடி கொடுத்த எழில்-தாறுமாறாக புகழ்ந்து தள்ளிய பழனிச்சாமி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

விடிந்ததும் எல்லோருக்கும் பாக்கியாகாபி கொண்டு வந்து கொடுக்க எல்லோரும் குடித்து விட்டு பாக்கியாவைப் பாராட்டுகின்றனர். இதனைப் பார்த்த கோபியும் ராதிகாவும் கடுப்பாகின்றனர்.கோபி வாய்க்குள்ளே அவர்களைத் திட்டி முனுமுனுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்போது பழனிச்சாமி பாக்கியா ரொம்ப திறமைசாலி கிச்சனுக்குள்ள போய்ப்பாருங்க அவங்க எப்படி மற்றவங்களை வழி நடத்திறாங்க என்று தெரியும் என்று சொல்லி பாராட்டுகின்றார்.


தொடர்ந்து பாக்கியாவைத் தேடி கிச்சனுக்கு வரும் பழனியும் பாக்கியாவிடம் வெளில உங்களைப் பற்றி தான் எல்லோரும் பேசிட்டு இருக்கிறாங்க. உங்க சாப்பாடு எல்லாமே சூப்பர் என்று சொல்லிட்டு இருக்கிறாங்க என்று பெருமையாகப் பேசிட்டு இருக்கும் போது அங்கு எழில் வருகின்றார். எழில் வந்ததைப் பார்த்த பாக்கியா மகிழ்ச்சியடைகின்றார்.

அப்போது எழில் நான் பாண்டிச்சேரிக்கு வந்தேன் அப்பிடியே உன்னையும் பார்த்திட்டு போகலாம் என்று தான் வந்தேன் என்று சொல்லி கதைத்துக் கொண்டிருக்கின்றார்கள். தொடர்ந்து பழனிச்சாமி எழிலைக் கூட்டிக் கொண்டு போய் சுதாகரிடம் அறிமுகம் செய்து வைக்கின்றார். யாராவது நல்ல தயாரிப்பாளர் கிடைத்தால் இவருக்கு சொல்லு படம் எடுக்க என்று சொல்ல அதற்கு சுதாகரும் ஓகே சொல்கின்றார்.


மறுபுறம் ராதிகா புடைவை கட்டிட்டு வந்து நான் நல்லா இருக்கிறேனா என்று கேட்க கோபி புகழந்து தள்ளிதோடு ராதிகாவுக்கு ஒரு நெக்லஸ்ஸையும் பரிசாகக் கொடுக்கின்றார். இதைப் பார்த்த ராதிகா சந்தோசப்படுகின்றார். பின்னர் எழிலும் பாக்கியாவும் செல்வியும் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

அப்போது செல்வி கோபியும் ராதிகாவும் கல்யாண வீட்டுக்கு வந்திருப்பதைச் சொல்ல எழில் அதிர்ச்சியடைகின்றார்.அப்போது பாக்கியா நீ எதுவும் அவர் கிட்ட பேசக்கூடாது என்று சொல்கின்றார். தொடர்ந்து எழிலுக்கு அமிர்தா போன் பண்ணியதால் எழில் பேசிட்டு இருக்கும் போது அந்த வழியாக வந்த கோபி பாக்கியாவும் பழனியும் சேர்ந்து இங்க வந்திருக்கிறாங்க என்று பாக்கியா பற்றி தவறாக சொல்ல எழில் அம்மா நல்லா இருக்கிறாங்க என்று பொறாமையா இருக்கா என்று பதிலடி கொடுக்கின்றார்.


தொடர்ந்து எல்லாரும் சாப்பாட்டைப் பற்றி பேசிட்டு இருக்கும்போது கோபி கடுப்பாகின்றார்.அப்போது மலேசியாவில் இருந்து 20 பேர் நாளைககு வருவாங்க என்று சுதாகரின் சம்மந்தி சொல்ல அவங்களுக்கு மலேசியா சாப்பாடே கொடுக்கலாமே எதுக்கு ஹொட்டல்ல வாங்கனும் உங்கடசமையல் காரங்களையே சமைக்க சொல்லலாமே என கோபி பாக்கியாவை கோர்த்து விடுகின்றார்.சுதாகர் இவரின் செயலைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement