• Sep 21 2024

இனியாவை காலேஜில் சேர்க்கப் போன கோபிக்கு நடந்த அவமானம்- நண்பன் கேட்ட முக்கிய கேள்வி - கெத்தாக நடந்த பாக்கியா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருககும் சீரியல் தான பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியா இனியாவை காலேஜில் சேர்த்து விடுவதற்காக கூட்டிக் கொண்டு போகின்றார். அங்கே பாக்கியா காலேஜைப் பார்த்ததும் வியப்படைகின்றார். இனியாவை வலது கால் எடுத்து வைத்து வரும் படி அழைக்கின்றார். இனியாவும் பாக்கியா சொல்வதைக் கேட்டுக் கொண்டு செல்கின்றார். பின்னர் அட்மிஷன் போர்ம் வாங்கி பாக்கியா இனியாவின் டீரைல்ஸைப் பதிகின்றார்.


தொடர்ந்து கோபி தன்னுடைய நண்பனைச் சந்திக்கின்றார். சந்தித்து எனக்கு கொஞ்சம் அவசரம் அதனால தான் உன் கிட்ட கேட்கிறேன் தப்பா நினைச்சுக்காத என்று சொல்ல,நண்பர் இதில என்னடா இருக்கு என்ன வேணும் என்று சொல் என்று சொல்ல எனக்கு அவசரமாக ஐம்பதாயிரம் பணம் வேணும், இனியா காலேஜில் கட்டணும் எனறு சொல்ல நண்பர் இதுக்கு தான் வரச் சொன்னியா,போன்ல கேட்டிருந்தாலே தந்திருப்பேனே என்று சொல்கின்றார்.

தொடர்ந்து பணம் தாரேன் பாக்கியா தந்த வீட்டுப் பணம் 18 லட்சத்தையும் என்னடா பண்ணின என்று கேட்க முதலில் பதில் சொல்ல முடியாமல் முழித்த கோபி பின்னர் அந்தப் பணத்தை  ராதிகாவின் அக்கவுண்டில் போட்டு விட்டதாக சொல்கின்றார்.அப்போது நண்பர், எதுக்குடா இப்பிடி பண்ணின அவங்க கேட்டாங்களா உன்கிட்ட என்று சொல்ல இல்லடா, அடிக்க சண்டை வருது அவளை கூல் பண்ணலாம் என்று தான் அவ அக்கவுண்டில் பணம் போட்டதா சொல்லி சமாளிக்கின்றார் கோபி.


மறுபுறம் பாக்கியா 1அரை லட்சம் பணத்தையும் கட்டி விட்டு இனியாவை வெளியே கூட்டிட்டு வரும் போது இனியா, இவ்வளவு பணம் எப்படி கிடைச்சது என்று கேட்க பாக்கியா என் கல்யாணத்திற்காக சேர்த்து வைச்சேன் என் சொல்ல இனியா, கல்யாணத்திற்கு சேர்த்து வைத்த பணத்தை இங்க கட்டிட்ட அப்போ கல்யாணத்திற்கு என்ன பண்ணுவ என்று நக்கலாக கேட்க பாக்கியா, இப்போ உனக்கு கல்யாணம் தான் இல்லாத குறையா என்று பேசிட்டு வரும் போது கோபி ஓடி வருகின்றார்.

இனியாவைக் கண்ட கோபி வா ஃபீஸ் கட்டலாம் என்று கூப்பிட இனியா அம்மா ஃபீஸ் கட்டிட்டாங்க என்று சொல்ல கோபி அதிர்ச்சியடைகின்றார். இதனால் மொத்த பணமும் கட்டியாச்சா என்று திரும்பத் திரும்ப கேட்கின்றார். பின்னர் சந்திக்க மூவரும் பிரின்ஸிப்பலை போகின்றனர். கோபி பாக்கியாவை வெளியே நிற்க சொல்லி விட்டு போக பாக்கியா தானும் உள்ளே போகின்றார்.


அத்தோடு பாக்கியா இனியாவை காலேஜில் சேர்க்க பிரின்ஸிபலுடன் எப்படி பேச வேண்டும் என்பதை எழில் மற்றும் ஜெனி கிட்ட கேட்டு கற்றிருந்தார். அதை நினைவில் வைத்து பிரின்ஸிபலுடன் ஆங்கிலத்தில் பேச கோபி அதிர்ச்சியடைகின்றார். பேசி முடிந்ததும் பாக்கியா இனியாவைக் கூட்டிக் கொண்டு வெளியே வர கோபி வியந்து பார்க்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement