• Sep 21 2024

கோபி போட்ட கட்டளை.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்; குழம்பி தவிக்கும் ராதிகா – இன்றைய முழு எபிசோட் அப்டேட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்பு நோக்கி நகருகின்றது பாக்கியலட்சும் தொடர்.அடுத்து என்ன நடக்கப்போகின்றது என ஆவலாக காத்துக்கொண்டு இருக்கிறார்கள் ரசிகர்கள்.இவ்வாறுஇருக்கையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்…

வீட்டில் கோபி பாக்கியா கோர்ட்டுக்கு போன விஷயம் குறித்து எல்லோரும் பேசிக் கொண்டிருக்க, இனியா இந்த வீட்ல இருக்க போறது யாரு? அப்பாவா? அம்மாவா? என கேட்க அப்படி எல்லாம் எதுவும் நடக்காதென அவருடைய தாத்தா ஆறுதல் கூறுகிறார்.

ஈஸ்வரி ராதிகா வீட்டுக்கு போனதுக்கு பதில் கோட்டுக்கு போய் இருக்கலாம் என செழியன் சொல்ல ஈஸ்வரி கோபப்படுகிறார்.மேலும் இந்த பக்கம் பாக்கியா எழிலுடன் ஹோட்டலுக்கு சென்று வித விதமாக உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுகின்றார்.

இவ்வாறுஇருக்கையில் வீட்டுக்கு வந்த கோபியிடம் என்னாச்சு என்னை கேட்க எல்லாம் முடிஞ்சு போச்சு கோர்ட்ல அவ்வளவு தைரியமா தெளிவா விவாகரத்து கொடுத்த ஒத்துக்கிட்டேன் விவாகரத்தும் கொடுத்துட்டாங்க இனி எனக்கும் பாக்யாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவள் எனக்கு பொண்டாட்டி கிடையாது என கோபி சொல்கிறார்.

என்னை மீறி இந்த வீட்ல இருந்து யாராவது பாக்கியாவோட தனிப்பட்ட முறையில் உறவு வைத்துக் கொண்டால் நடக்கிறதே வேற என சொல்லிவிட்டு மேலே சென்று விடுகிறார். இதனால் குடும்பம் மொத்தமும் அதிர்ச்சி அடைகிறது‌.

அத்தோடு ராதிகா வீட்டில் கோபி வந்து விவாகரத்து கிடைத்து விட்டதாக சொன்ன விஷயம் பற்றி பேசிக்கொண்டிருக்க டீச்சர் பத்தி எனக்கு நல்லா தெரியும் கோபி ஏதோ பொய் சொல்றாரு நீ வக்கீலுக்கு போன் போட்டு கேளு அந்த அம்மாவும் இவ்வளவு நாளா இந்த விஷயத்துக்கு தான் காத்துகிட்டு இருந்துச்சு போல என ராதிகாவின் அண்ணா கூற உடனே வக்கீலுக்கு போன் போட்டு கேட்க விவாகரத்து கிடைத்து விட்டதென சொல்கிறார்.

இதனையடுத்து ராதிகா தான் இனி முடிவு எடுக்க வேண்டுமென அவருடைய அம்மா சொல்ல ராதிகா யோசிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement