• Sep 20 2024

துளசியையும் ராஜபாண்டியையும் நிரந்தரமாகப் பிரிக்க கோமதி காட்டிய ஆதாரம்- அதிர்ச்சியில் உறைந்த பொன்னி

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் வானத்தைப் போல. இந்த சீரியலில் துளசி கர்ப்பமாக இல்லை என்பது தெரிந்ததால் ராஜபாண்டி துளசியை தன்னுடைய வீட்டிலிருந்து துரத்தி விட்டார்.இதனால் துளசி தன்னுடைய அண்ணா வீட்டில் இருக்கின்றார்.

இது தான் சந்தர்ப்பம் என கோமதி, துளசியை நிரந்தரமாக ராஜபாண்டியிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்பதற்காக பல குறைகளைச் சொல்லி வருகின்றார். இப்படியான நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.


அதாவது துளசியும் ராஜபாண்டியும் சேர வேண்டும் என்பதற்காக பஞ்சாயத்து கூடப்படுகின்றது. அந்த பஞ்சாயத்தில் பொன்னிக்கும் சின்ராசுவுக்கும் திருமணம் நடக்கும் போது ராஜபாண்டியை கத்தியால் குத்தியது சரவணன் இல்லை பொன்னியின் அப்பா என்று சொல்கின்றார்.

அத்தோடு அது குறித்த வீடியோவையும் காட்டுகின்றார். இதைப் பார்த்த எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement