விஜய் டிவியில் ணளிபரப்பாகி வரும் சீரியல்களில் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று தான் தென்றல் வந்து என்னைத் தொடும். இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வருபவர் தான் வினோத் பாபு. இவர் 2018ம் ஆண்டு சிவகாமி என்ற தொடரில் நடிக்க தொடங்கியுள்ளார்.
தொடர்ந்து கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபல்யமான இவர் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற தொடரில் நாயகனாக நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.இதனை அடுத்தே தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற சீரியலில் நடிக்க இவருக்கு வாய்ப்புக் கிடைத்தது.
இந்த சீரியல் கதையிலும் நல்ல திருப்பங்கள் ஏற்பட்டு விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.நன்றாகவும் பாடக் கூடிய திறமை கொண்ட வினோத் பாபு புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார்.
இந்த நிலையில் Short Film ஒன்றில் நாயகயாக நடிக்க வினோத் பாபு ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். ஒரு கோடை காலத்தில் என பெயர் வைத்துள்ளார்களாம், மற்றபடி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் நல்ல திறமையான நடிகர் வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!