தமிழ் சின்னத்திரையான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சிப்பிக்குள் முத்து என்ற தொடர் மூலம் பிரபலமானவர் நடிகர் விஷ்ணுகாந்த்.
இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவந்த ஸ்வேதா என்பவரை காதலிக்க இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள்.
ஆனால் ஒரே மாதத்தில் இவர்களது திருமணம் விவாகரத்தில் முடிந்தது, பிரிய காரணமாக இருவருமே நிறைய விஷயங்களை மாற்றி மாற்றி கூறி வந்தார்கள்.
பரபரப்பாக இவர்களது திருமணம், விவாகரத்து குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வந்தது .
தற்போது நடிகர் விஷ்ணுகாந்த் குறித்து மகிழ்ச்சி தகவல் ஒன்று வந்துள்ளது. அவர் தமிழில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் தெலுங்கு ரீமேக்கில் நாயகனாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.
இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!