• Sep 20 2024

இனியாவுக்கு பெற்றோராக நின்ற கோபி மற்றும் ராதிகா- பாக்கியாவைத் தேடிச் சென்ற பழனிச்சாமி- குழப்பத்தில் இனியா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்தத சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

இனியாவுக்கு ஸ்கூலில் பாராட்டு விழா நடைபெறுகின்றது. பாக்கியாவிற்காக இனியா காத்திட்டே இருக்கின்றார்.ஆனால் பாக்கியா வரவே இல்லை. இருந்தும் ஜெனி பாக்கியாவுக்கு போன் செய்கின்றார். ஆனால் பாக்கியாவின் போன் வேலை செய்யவே இல்லை. இந்த நேரம் கோபி இனியாவைக் கூப்பிட்டு வாழ்த்துகின்றார்.


என்னால தான் உன்னால சரியா படிக்க முடில இருந்தாலும் நீ அதில கஷ்டப்பட்டு படிச்சு இவ்வளவு துாரம் முன்னேறி இருக்கிற எல்லாமே உன்னோட முயற்சி தான் என்று வாழ்த்துகின்றார். பின்னர் மேடையில் இனியாவை அழைத்து பரிசில்கள் எல்லாம் வழங்கி கௌரவிக்கின்றார்கள்.

அப்போது இனியா பேரன்ஸ் மேல வாங்க என்று சொல்லும் போது கோபி ராதிகாவையும் மேலே அழைக்கின்றார். அப்போது ராதிகா தான் மேலே வரமாட்டேன் என்று சொல்ல கோபி அவளை நீயும் தானே நல்லா பார்த்துக்கிட்ட அவ படிக்கும் போது நல்லா பார்த்துக்கிட்ட அதனால நீ மேல வரலாம் வா என்று கையைப் பிடித்து அழைத்துச் செல்கின்றார்.

இதைப் பார்த்த பாக்கியா குடும்பம் அதிர்ச்சியடைகின்றனர். தொடர்ந்து மேடையில் ஏறிய கோபியும் ராதிகாவும் இனியா தோள் மீது கை போட்டு புகைப்படம் எடுத்ததோடு ராதிகா இனியாவுக்கு வாழ்த்து சொல்கின்றார். பின்னர் கீழே வந்ததும் ராதிகா கோபியிடம் இந்த சந்தோஷமான டைம்ல இதைக் கவனிச்சீங்களா என்று கேட்கின்றார்.

அதற்கு கோபி அந்த இடியட் வரலஅது தானே எனக்கும் இது ஆச்சரியமாத்தான் இருக்கு எவ்வளவு தலை போகிற வேலையாக இருந்தாலும் வந்திடுவா இப்போ ஏன் வரல என்று சொல்லி விட்டு ராதிகாவின் கையைப் பிடித்துக் கொண்டு வெளியே போகின்றார். பின்னர் வீட்டிற்கு எல்லோரும் சென்றதும் பழனிச்சாமி கிப்டுடன் வந்து இனியாவைப் பாராட்டுகின்றார்.


அப்போது இனியா பாக்கியா மட்டும் இங்க இல்லை என்று சொல்ல ராமமூர்த்தி பழனிச்சாமியுடன் பாக்கியா சமைக்கும் இடத்திற்குச் சென்று பார்க்க கிளம்புகின்றனர். பின்னர் பாக்கியா இருக்கும் இடத்திற்கு வந்து பாக்கியாவிடம் என்ன நடந்தது என்று விசாரிக்க பாக்கியா எல்லாவற்றையும் சொல்கின்றார். இதனால் பழனிச்சாமி அங்கே தனக்கு தெரிந்த ஒருவர் இருப்பதைப் பார்த்து அவரைக் கூப்பிட்டு விசாரிக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement