• Sep 20 2024

பாதியில் ஓடிய டிரைவரால் பாக்கியா எடுத்த அதிரடி முடிவு... பயத்தில் ஈஸ்வரி... வியந்து பார்க்கும் கோபி... Baakiyalakshmi Serial..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் நேற்றைய தினம் என்ன நடந்துள்ளது என்பது குறித்துப் பார்ப்போம். 

அந்தவகையில் இந்த சீரியலில் மயூ வயதுக்கு வந்து விட்டதால் இனியாவுடன் கேரளா டூருக்கு கோபியால் போக முடியவில்லை, இதனால் பாக்கியா, ஈஸ்வரி, இனியா ஆகிய மூவரும் சென்றுள்ளனர். அப்போது போவதற்கு முன்னர் கோபி டிரைவரிடம் பல கேள்விகளைத் துருவித் துருவிக் கேட்டு "ஒழுங்கா உஷாரா கூட்டிட்டு போய் கூட்டிட்டு வரணும்" என மிரட்டலாகவும், கண்டிப்புடனும் கூறி எல்லோரையும் அனுப்பி வைக்கின்றார்.


பின்னர் எல்லோரும் ஜாலியாக செல்கின்றார். செல்வியும் கிண்டலடித்துக் கொண்டு வருகின்றார். எல்லோரும் மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் தாம்பரத்தை கடந்து வந்த பிறகு திடீரென டிரைவருக்கு போன் கால் வருகின்றது. போனை எடுத்துப் பேசிய டிரைவர் அதிர்ச்சி அடைகின்றார். அதற்கு காரணம் அவருடைய அப்பாவிற்கு ஆக்சிடென்ட் ஆகியுள்ளமை தான்.

இதனைஎடுத்து அந்த டிரைவர், அப்பா கூட யாருமே இல்லை என்று கூறிவிட்டு பதற்றத்தோடு அங்கிருந்து வீட்டிற்கு கிளம்புகின்றார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரும் முழிக்கின்றனர். பின்னர் ஈஸ்வரி "டிரைவர் இல்லாமல் எப்படி போறது ஒரு வாரம் வெயிட் பண்ணி நீ கோபியோடவே போய் இருக்கலாம். அவதான் அடம் பிடிக்கிறானா நீயும் அவ கூட சேர்ந்து ஆடுறா" என பாக்கியாவைத் திட்டுகின்றார்.


பதிலுக்கு பாக்கியா, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அத்தை என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம் என்று கூறுகின்றார். பின்னர் எழில், செழியன் என இருவருக்கும் பாக்கியா போன் செய்ய இருவரும் போனை எடுக்காமல் இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து பாக்கியா சிறிது நேரம் யோசித்து விட்டு உடனே டிரைவர் சீட்டில் உட்கார்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்கின்றார். 


இதனைப் பார்த்த ஈஸ்வரி "நீயா ஓட்ட போறாய்" என கேட்டுப் பதறுகிறார். ஈஸ்வரி எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் பாக்கியா காரை எடுக்கின்றார். உடனே ஈஸ்வரி கண்ணை மூடிக்கொண்டு பயத்தில் ஓம் நமசிவாய என்று சொல்லிக் கொண்டு வருகின்றார்.

மறுபுறம் கோபி மயூவுக்கு தங்க நகை கொடுத்து சந்தோசப்படுகின்றார். பின்னர் விருந்தினர்கள் வர, மயூவை அலங்கரித்து விழா மேடைக்கு அழைத்து வருகின்றனர். அந்த சமயத்தில் சேலையில் மயூவை பார்த்த கோபி தன்னையே மெய் மறந்து வியந்து பார்க்கின்றார். இவ்வாறாக இந்த எபிசோட் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement