• Sep 20 2024

பாக்கியாவைப் பழி வாங்க வில்லனாக மாறிய கோபி- திடீரென ஈஸ்வரி எடுத்த முடிவு- செம குஷியில் இருக்கும் மயூ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

கோபி வீட்டை விட்டு போனதைத் தொடர்ந்து வீட்டை யாருடைய பெயரில் எழுதுவது என் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது எல்லோருமே பாக்கியா பெயரில் வீட்டை எழுதனும் என்று சொல்ல முதலில் மறுப்புத் தெரிவித்த பாக்கியா பின்னர் தன்னுடைய பெயரில் வீட்டை எழுத சம்மதிக்கின்றார்.


தொடர்ந்து தங்களுடைய வீட்டுக்குச் சென்ற ராதிகாவும் கோபியும் பாக்கியா வீட்டில் நடந்தது பற்றி பேசுகின்றனர். அப்போது ராதிகாவின் அம்மா, அவங்க சொன்னாங்க என்று நீங்க கிளம்பி வந்திருக்கக் கூடாது என்று சொல்ல அப்போ இன்னும் அங்க இருந்து அவமானப்படச் சொல்லுறியா, அதான் கிளம்பி வந்திட்டோம் கோபியை கூட மதிக்கல என்று சொல்லுகின்றார்.

ராதிகா திரும்ப வீட்டுக்கு வந்ததால் மயூவும் ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றார். தொடர்ந்து பாக்கியா வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது ஈஸ்வரி அவ மட்டும் தான் வீட்டை விடடு போகனும் என்று நினைச்சேன் கோபி போகனும் என்று நான் நினைக்கவே இல்லை, பிள்ளைங்க என்ன தப்பு பண்ணினாலும் பெத்தவங்களால பிள்ளைகளை விட்டிட்டு இருக்க முடியுமா? அவன் வீட்டை விட்டுப் போனது ரொம்ப கவலையா இருக்கு என்று சொல்கின்றார்.


அப்போது எல்லோரும் ஆறுதல்ப்படுத்த ஈஸ்வரி நான் பக்கத்து வீட்டுக்காரங்களோட சேர்ந்து காசிக்கு போகலாம் என்று இருக்கிறேன். நீங்களும் வாரீங்களா என்று கேட்க ராமமூர்த்தி முதலில் காசிக்கு போகவேண்டாம் என மறுத்து விடுகின்றார். பின்னர் உனக்கு மனசு சரி இல்லை என்றால் போய்ட்டு வா என்று சொல்கின்றார்.


தொடர்ந்து ரூமுக்குள் கோபி தனியாக அங்குமிங்கும் நடந்து திரிய ராதிகா போய் இன்னும் வீட்டில நடந்ததைப் பற்றி நினைச்சுக் கொண்டே இருப்பீங்களா என்று கேட்க அப்போது கோபி அந்த இடியட் என்னை வெளில போ என்று சொல்லி்டா அவளை நான் சும்மாவே விடமாட்டேன். என்ன பண்ணுறேன் என்று பாரு என்று பேசுகின்றார். பின்னர் தன்னுடைய நண்பனிடம் இது பற்றி சொல்லுவதோடு ஓவராக குடிக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement