விஜய் தொலைக்காட்சியில் இல்லத்தரசிகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.இந்த சீரியல் ஆரம்பம் முதல் இன்று வரை அடுத்தடுத்து சுவாரஸ்யமாக நகர்த்துக்கொண்டு இருக்கிறது.
சீரியலின் கதைப்படி கோபி பாக்கியாவின் வீட்டுக்குள் களவாகச் சென்று பாக்கியாவின் லைசன்சை எடுத்து உடைத்து போட்டார்.இருப்பின் பழனிச்சாமியின் உதவியால் பாக்கியா பெரிய பிரச்சினையில் இருந்து தப்பித்து விட்டார்.
மேலும் லைசன்சைத் திருடியது கோபி தான் என்று தெரிந்ததும் நேராக ராதிகா வீட்டுக்குச் சென்று தன்னுடைய வீட்டுச் சாவியை வாங்கி விட்டார். இதனால் பாக்கியா மீது கோபி கடும் கோபத்தில் இருக்கின்றார்.
இப்படியான நிலையில் கோபி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்கியாவுடன் கைகோர்த்துச் செல்லும் வீடியோவைப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருவதையும் காணலாம்.
Listen News!