• Sep 21 2024

திடீரென ராதிகாவுக்கு சர்ப்போட் பண்ணி பேசிய பாக்கியா- இனியாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி- குழப்பத்தில் கோபி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்மி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியாவின் ரூமுக்குள் ராதிகாவும் இனியாவும் துாங்கிவிட்டதால் பாக்கியா ஹோலில் படுத்திருக்கிறார். துாக்கம் வராமல் இனியா பாக்கியாவிடம் வந்து பேசுகின்றார். அப்போது இனியா அம்மா நீ ரொம்ப நல்ல அம்மா எங்களை விட்டு போய்டாத அப்பா எங்க வேணும் என்றாலும் போகட்டும் நீ மட்டும் போய்டாத எனச் சொல்கின்றார்.


இதைக் கேட்ட பாக்கியா நீங்க எல்லோரும் இங்க இருக்க நான் எதுக்கு போகணும் நான் போக மாட்டேன் என்று கூறி ஆறுதல்ப்படுத்தி இனியாவைத் துாங்க வைக்கின்றார். தொடர்ந்து விடிந்ததும் எழிலும் பாக்கியாவும் இருக்கும் போது இனியா போனையே பார்த்திட்டு இருக்கும் போது பாக்கியா யார் கூட பேசிட்டு இருக்கிற என்று கேட்கிறார்.

அப்போது இனியா சரண் கிட்டை பேசிட்டு இருக்கிறேன். அவன் என்னை ஸ்னாக்ஸ் கடைல மீட் பண்ணலாமா என்று கேட்கிறான் என்று சொல்ல பாக்கியா நீ வீட்டுக்கு கூட்டிட்டு வா வீட்டுக்கு வந்து பேசு மற்ற இடங்களில சந்தித்து பேசுவது தப்பு என்று சொல்கின்றார். இதைக் கேட்டதும் இனியா நீயும் ராதிகா மாதிரி பண்ணாதம்மா என்று சொல்ல பாக்கியா ராதிகா வெளியில போனது தப்பு என்று சொன்னாங்க என்றால் இந்த விஷயத்தில் சரி என ராதிகாவுக்கு சர்ப்போட் பண்ணி பேசுகின்றார்.


பின்னர் அனைவரும் காபி குடித்துக் கொண்டு இருக்கும் போது காப்பி தனக்கும் காப்பி வேண்டும் என்பது போல் பாக்கியாவைப் பார்க்க பாக்கியா எதுவும் சொல்லாமல் கிளம்புகின்றார்.அத்தோடு பிறகு பாக்கியா ஆபீசுக்கு கிளம்பி தயாராக இருக்க ஈஸ்வரி வேலை முடிந்ததும் நேரா வீட்டுக்கு தான வருவ என கேட்க இந்த வீட்டை விட்டு விட்டுப் போக எவ்வளவு சந்தர்ப்பம் அமைந்தது. ஆனால் அப்போதெல்லாம் போகாத நான் எனக்கு இப்போது சந்தோஷம் தர நிறைய விஷயங்கள் இருக்கும்போது எங்க போய்ட போறேன்? எங்கேயும் போகமாட்டேன் அத்தை என சொல்லி கேன்டீன் கிளம்புகிறார்.

பிறகு கோபி ரூமில் தூங்கிக் கொண்டிருக்கும் ராதிகாவை எழுப்ப முடியாமல் காபிக்காக புலம்பிக் கொண்டிருக்க பிறகு ஒன்பதரை மணிக்கு ராதிகா எழுந்து குளித்து தயாராகி விட்டு கோபியிடம் பேச அவர் காபி குடிக்கணும் போல இருக்கு நான் ஆர்டர் பண்ணவா என கேட்க இதெல்லாம் எதுக்கு ஆர்டர் பண்றீங்க நான் போய் போட்டுட்டு வருகிறேன் என்று சொல்ல கோபி வேண்டாம் அதனால ஏதாவது பிரச்சனை வரப்போகுது என பயப்படுகிறார்.


இந்த வீட்ல தான் இருக்க போறோம்னு முடிவு பண்ணியாச்சு, என்ன நடந்தாலும் சமாளிச்சு தானே ஆகணும் என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.




Advertisement

Advertisement