• Sep 21 2024

இனியா பாக்கியாவுடன் டூருக்கு போகக் கூடாது என்று தடுத்த கோபி- திட்டி அனுப்பிய ராதிகா- பதிலடி கொடுத்த ஈஸ்வரி-Baakiyalakshmi

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

இனியா தான் டூருக்கு அம்மா மற்றும் பாட்டியுடன் போகப் போறேன் என்று சொல்ல, கோபி நீ அந்த இடியட் கூட போக வேணாம் பிரின்சிபல் கிட்ட பேசு எனக்கு இன்னும் ஒரு வாரம் டைம் கொடு நானே உன்னை கூட்டிட்டு போறேன் என்று சொல்ல, இனியா முடியாது டாடி இது முக்கியமான டூர் கட்டாயம் போக வேண்டும் என்று சொல்கின்றார்.


இதனால் கோபமடைந்த கோபி வீட்டிற்கு வந்தும் இனியாவை பாக்கியாவை நம்பி அனுப்ப வேண்டாம் என்று சொல்கின்றார். அப்போது எழில் அது தான் உங்களால கூட்டிட்டு போக முடியாது தானே அப்பிறம் யார் கூட்டிட்டு போனால் என்று சொல்ல, பாக்கியா இனியா என் பொண்ணு என்னை நம்பாமல் யாரை நம்புவா என்று கேட்கின்றார்.

அப்போது ஈஸ்வரி சரிப்பா நாங்க பாக்கியாவை நம்பல, நீ கூட்டிட்டு போறியா என்று கேட்க கோபி என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்கின்றார். அத்தோடு நாங்க சரியா போய் வருவமா இல்லையா என்பது பற்றி வீட்டில இருக்கிறவங்க கவலைப்படுவாங்க நீங்க கிளம்புங்க என்று சொல்கின்றார். இதனால் கோபி என்ன செய்வதென்று தெரியாமல்  ராதிகா வீட்டுக்கு போய் புலம்புகின்றார்.


அப்போது ராதிகா டூர் பற்றி பேசத் தான் போனீங்களா, மயூ பங்சனுக்கு கூ்பிடப் போகலையா என்று கேட்க, கோபி அவங்கள எப்பிடி கூப்பிட முடியும் என்று சொல்ல ராதிகாவின் அம்மா உங்க மூத்த மனைவியை கூப்பிட சொல்லல உங்க அம்மா அப்பாவை தான் கூப்பிட சொன்னோம். உங்களால ராதிகா கோவிச்சிட்டு போய்ட்டா பாருங்க என்று சொல்கின்றார்.

இதனால் ராதிகாவை சமாதானப்படுத்த போன கோபி, நான் அம்மா அப்பாவை கட்டாயம் கூப்பிடுறேன் நீ கவலைப்படாத என்று சொல்ல, ராதிகா நான் உங்க வீட்டில ஒரு பங்சன் என்றால் வந்து நிற்கிறன் தானே, ஆனால் நம்ம வீட்டில ஒரு பங்சன் என்றால் அவங்கள கூப்பிட மாட்டீங்களா எனத் திட்டி விட்டு போகின்றார்.


இதனால் கோபி, மீண்டும் ஈஸ்வரி வீட்டுக்குச் சென்று ராதிகா ரொம்ப ஆசைப்படுறா, மயூ பங்சனுக்கு வரனும் நீங்க என்று சொல்ல ஈஸ்வரி நாங்க எதுக்கு வரனும் என்று கண்டபாடடுக்கு திட்டி அனுப்புகின்றார். கோபி போனதும் ராமமூர்த்தி மயூவுக்காக போகனும் நீ என்ன நினைக்கிற பாக்கியா என்று சொல்ல பாக்கியாவும் போய்ட்டு வாங்க அத்தை என்று ஈஸ்வரியை சமாதானப்படுத்துகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement