• Sep 20 2024

திடீரென நெஞ்சுவலியால் துடித்த கோபி- அதிர்ச்சியில் உறைந்து நின்ற ராதிகா- குழப்பத்தில் இருக்கும் ஈஸ்வரி- Baakiyalakshmi Serial

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கோபியை நகைக்கடைக்கு கூட்டிட்டு போகின்றார். ராதிகா, அப்போது கோபி மெல்லிய செயினாக காட்டச் சொல்ல ராதிகா கிராண்டான நகை தான் வேணும் நீங்க சும்மா இருங்க என்று சொல்ல, கோபி பணத்திற்கு என்ன செய்வதென்று யோசிக்கின்றார்.அப்போது ராதிகா ஒரு நகை செலக்ட் பண்ணி அதை வாங்கச் சொல்லி சொல்கின்றார்.


அப்போது நகையின் விலையைக் கேட்டு கோபி திடீரென மயங்கி விழ ராதிகாவும் மயூவும் அதிர்ச்சியடைவதோடு கோபியை ஹாஸ்பிட்டலில் கொண்டு போய் சேர்க்கின்றனர். பின்னர் கோபியைக் செக் பண்ணி பார்த்த டாக்டர் அவர் நோர்மலாகத் தான் இருக்கிறாரு, ரொம்ப மன அழுத்தத்தில் இருந்திருக்காரு அதனால தான் இப்படி ஆகியிருக்கு.

துாங்கி எழுந்தால் சரி ஆகிடும் என்று சொல்கின்றார் பின்னர் வீட்டில் இருக்கும் ஈஸ்வரி மனசு ஏதோ மாதிரி இருக்கு என்ன என்று தெரில கோபிக்குஒரு தடவை போன் பண்ணி பார்க்கலாம் என்று போன் பண்ணுகின்றார்.அப்போது கோபி தனக்கு நெஞ்சுவலி வந்து ஹாஸ்பிட்டலில் இருப்பதாகச் சொல்கின்றார்.


இதைக் கேட்ட ஈஸ்வரி எல்லோரிடமும் சொல்லி கதறி அழுகின்றார். அப்போது செழியன் கோபிக்கு போன் பண்ண ராதிகா வேண்டிப் பேசுகின்றார். கோபிக்கு இப்போ நோர்மலாக இருப்பதால் வீட்டை கூட்டிட்டு போகச் சொல்லிட்டாங்க, அதான் வீட்டை கூட்டிட்டு போய்க் கொண்டிருக்கின்றேன்.என்று சொல்கின்றார்.


இதைக் கேட்ட ஈஸ்வரி இப்பவே கோபியைப் பார்த்தாகனும் என்று கிளம்பி ராதிகா வீட்டுக்கு மயூவையும் செழியனையும் கூட்டிட்டு போகின்றார். இதனால் பாக்கியா என்ன செய்வதென்று யோசிக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement