• Sep 21 2024

பாக்கியாவின் லைசன்னை மடக்கி எறிந்த கோபி- என்ன செய்வது என்று தவிக்கும் எழில்- பழனிச்சாமி எடுத்த முடிவு- Baakiyalakshmi Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கோபி டீகுடித்துக் கொண்டிருக்கும் இடத்திற்கு பழனிச்சாமியும் வருகின்றார். அப்போது கோபி தன்னுடைய நண்பரிடம் பாக்கியா பற்றித் தப்புத் தப்பாக பேசிக் கொண்டிருக்கின்றார். அவ என்னை அவமானத்தினவள் தானே போலீஸ் பிடிச்சிட்டு போய் ஜெயில்ல வைக்கட்டும் என்று என்று சொல்லிக் கொண்டிருக்க பழனிச்சாமி கேட்டு விடுகின்றார்.


தொடர்ந்து வீட்டில் எங்கு தேடியும் லைசன்ஸ் கிடைக்காததால் என்ன செய்வதென்று தெரியாமல் எழில் அமிர்தா ராமமூர்த்தி ஆகியோர் யோசிக்கின்றனர்.பாக்கியா போன் பண்ணி லைசன்ஸ் கிடைத்து விடும் தானே என்று சொல்ல எழில் எப்படியாவது உனக்கு எடுத்து அனுப்புகின்றேன் என்கின்றார்.

மறுபுறம் கோபி பழனிச்சாமி நிற்பதைக் கவனிக்காமல் பாக்கியாவின் ஒருஜினல் லைசன்சை தான் எடுத்து விட்டதாகவும் லைசன்ஸ் தன்னுடைய கையில் இருப்பதாகவும் சொல்லி லைசன்சை உடைத்து கீழே போட்டு விட, இதைப் பார்த்துக் கொண்டிருந்த பழனிச்சாமி அதனை எடுத்து சரி செய்துவிட்டு இனியாவுக்கு போட்டா எடுத்து அனுப்புகின்றார்.


மறுபுறம் லைசன்ஸ் வராததால் போலீஸ் பாக்கியாவை வண்டியில் ஏறச் சொல்கின்றனர். ஈஸ்வரியையும் இனியாவையும் கிளம்பச் சொல்கின்றார். அப்போது பழனிச்சாமி லைசன்ஸை போட்டோ எடுத்து அனுப்பியிருக்கிறேன் பாருங்க என்று சொல்ல, இனிய போலீஸுற்கு காட்டுகின்றார். இதனால் அவர்களும் பாக்கியயாவை மன்னித்து விடுகின்றனர்.

பின்னர் பக்கத்தில் நின்றவர்களும் பாக்கியா மீது எந்தத் தப்பும் இல்லை,அந்த ஐயா தான் வந்து விழுந்தாரு என்று சொல்ல, ஈஸ்வரி இதெல்லாம் முதல்ல சொல்ல மாட்டீங்களா என்று திட்டுகின்றார். பின்னர் பாக்கியா எல்லோரையும் சமாளித்துக் கொண்டு மீண்டும் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்புகின்றார்.


அப்போது கோபி போன் பண்ணி எல்லாம் ஓகே தானே நீயும் பாட்டியும் வந்து கொண்டு தானே இருக்கிறீங்க என்று கேட்க, இனியா ஆமாம் டாடி ஒரு பிரச்சினையும் இல்லை. பழனிசச்சாமி அங்கிள் லைசன்சை போட்டோ பிடிச்சு அனுப்பினாரு. அதனால எல்லாம் ஓகே ஆகிடுச்சு என்று சொல்ல கோபி கோபப்பட்டு தனது நண்பனிடம் பழனிச்சாமி பற்றி திட்டுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.




Advertisement

Advertisement