• Sep 20 2024

பாக்கியாவிடமே ராதிகா தான் என் உயிர் என்று கூறிய கோபி- அதிரடித் திருப்பத்துடன் பாக்கியலட்சுமி சீரியல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

மேலும் இந்த சீரியலில் கோபியின் திருட்டுத்தனம் அனைத்தும் பாக்கியா மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிந்து விட்டது. இதனால் பாக்கியாவும் வீட்டை விட்டு சென்று விட்டார்.

பாக்யாவை நினைத்து வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சோகத்தில் உள்ள நிலையில் கோபி தற்பொழுது ராதிகாவைத் தான் திருமணம் செய்வதென்றும் பாக்கியாவுக்கு டிவோர்ஸ் கொடுத்திரணும் என்று முடிவு பண்ணி தன்னுடைய ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கின்றார்.

அதாவது பாக்கியாவிடம் போய் வீட்டில் உள்ளவர்களுக்காக வீட்டுக்கு வா என்று கூறும் போது பாக்யா இது மாதிரி நடக்காது என சத்தியம் பண்ணுங்க என்கிறார்.இதனால் கோபி தடுமாறி பாக்கியாவிடமே ராதிகா தான் என் உயிர் என்று கூறி மாட்டி விடுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement