• Sep 21 2024

பாக்கியாவை பிளான் பண்ணி அவமானப்படுத்திய கோபி- செழியன் பற்றி அறிந்த ராமமூர்த்தி- செம சந்தோஷத்தில் எழில்- Baakiyalakshmi Serial

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமும் காணப்படுகின்றது. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

செழியன் காலையில் ஹாஸ்பிட்டலுக்கு வந்து ஜெனியிடம் வேலை எனக்கு அதான் போய்ட்டன் நைட் உன்னோட தஙகல என்று கோவிக்காத என்று சமாதானப்படுத்துகின்றார். அப்போது ஜெனி பரவாயில்லை செழியா என்று சொல்ல பாக்கியா கோபத்தில் எழும்பி வெளியில் போகின்றார். இதனால் பின்னாடியெ செழியனும் போகின்றார்.

செழியனிடம் பாக்கியா, உனக்கு குழந்தை பிறந்திருக்கு, அதை விட இது ஒன்றும் முக்கியமான வேலை இல்லையே அந்த வேலைய நீ விடு உண்மையாகவே நீ வேலைக்குத் தான் போனியா பொய் சொல்லாத என்று பேசிட்டு இருக்கும் போது ஜெனியின் அம்மா வந்து பரவாயில்லை விடுங்க மாப்பிள்ளை வேலை என்பதால் தானே போனாரு என்று சமாளித்து விடுகின்றார்.


அப்போது பாக்கியா ஜெனியின் அம்மா போனதும் அவங்களுக்கு இன்னும் உன்னை பத்தி தெரில, ஆனால் எனக்கு தெரியும் நீ என்ன ண்ணுற என்று கவனமா இருந்துக்கோ என்று திட்டுகின்றார். தொடர்ந்து வீட்டில் இருந்து எல்லோரும் பேசிட்டு இருக்கும் போது பாக்கியா வேறொரு ஆப்பீஸில் கான்டீன் ஆடர் கிடைச்சிருக்கு என்கின்றார்.

இதனை பழனிச்சாமி தான் எடுத்துக் கொடுத்தாரு என்று சொல்ல எல்லோரும் சந்தோசப்படுகின்றனர். அத்தோடு கான்டீன் ஆடர் கிடைக்கும் என்று எல்லோரும் ஊக்கப்படுத்தி விட்டுச் செல்ல, பாக்கியா ராமமூர்த்தியிடம் செழியனின் போக்கு சரி இல்லை மாமா ஏதோ தப்பு பண்ணுறான் போல இருக்கு, ஜெனியையும் குழந்தையையும் வீட்டுக்கு தான் கூட்டிட்டு வரணும் மாமா என்கின்றார். அதற்கு ராமமூர்த்தியும் சரி என்கின்றார்.

பின்னர் நிலாபாப்பாவிடம் கொஞ்சிட்டு இருக்கும் செழியன் இன்னொரு குழந்தை பெத்துக்கனும் போல இருக்கு நிலாவுக்கும் துணையாக இருக்கும் தானே என்று சொல்ல, அமிர்தா சந்தோசப்படுகின்றார். அத்தோடு இருவரும் சேர்ந்து ரொமான்ஸ் பண்ணுகின்றனர். விடிந்ததும் பாக்கியா புதுக்கம்பனிக்கு ஆடர் எடுக்க போகின்றார்.


அது கோபியின் நண்பனது கம்பெனி என்பதால் கோபி அங்கு வரும் பாக்கியாவை கண்டு இவ எதுக்கு வந்திருக்கிறா என்று நண்பனிடம் விசாரிக்கின்றார். ஆடர் விஷயமா வந்திருக்கிறார் என்று சொல்ல,கோபி தன்னுடைய நண்பரிடம் பாக்கியா பற்றி தப்பு தப்பாக பேசுகின்றார். இதனால் அவரது நண்பரும் முதலாளியாக இருக்கும் தனது மாமனாரிடம் சென்று பாக்கியாவுக்கு ஆடர் கொடுக்க வேண்டாம் என்று சொல்ல அவரும் அப்படி செய்கின்றார்.

ஆடர் கைவிட்டுப் போனதால் பாக்கியா வெளியில் வர கோபி யாருடைய கம்பெனிக்கு போனாலும் உனக்கு ஆடர் கிடைக்க விடமாட்டேன். இது என்னுடைய நண்பனின் கம்பெனி என்கின்றார். இதைக் கேட்ட பாக்கியா அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement