• Sep 21 2024

ராதிகாவின் அம்மாவிடம் கோபப்பட்டு பேசிய கோபி- விழுந்து விழுந்து சிரித்த எழில் மற்றும் பாக்கியா-Baakiyalakshmi Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இநத சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

இனியாவிடம் பேசிக் கொண்டிருக்கும் கோபி,உங்க அம்மாவால் எத்தனை விஷயத்தை தான் பண்ண முடியும். எல்லாத்தையும் சேர்த்து பண்ணினால் இப்பிடி தான். கெஞ்ச நாள்ல காலேஜையும் விட்டிடுவா பாரு , அந்த பழனிச்சாமி எதுக்கு இங்க வருவான் கொஞ்ச நாள் தானே பழக்கம்.என்று திட்ட இனியா உங்களுக்கு எதுக்கு டாடி பழனிச்சாமி அங்கிளைப் பார்த்தால் பிடிக்கல என்று கேட்கின்றார்.


இதனால் கோபி சாமளித்து விட்டு அங்கிருந்து கிளம்புகின்றார். பின்னர் விடிந்ததும் எழில் நிலாவுக்கு உடம்பு சரி இல்லாமல் போனது பற்றி பேசிக் கொண்டிருக்க ஈஸ்வரி பாக்கியாவிடம் எல்லா வேலையும் செய்து முடிச்சிட்டியா என்று கேட்க பாக்கியாவும் முடிச்சிட்டேன் அத்தை என்று சொல்ல,ஈஸ்வரி செல்வியைக் கூட்டிக் கொண்டு போய் யோகா சொல்லிக் கொடுக்கின்றார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த எழிலும் பாக்கியாவும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.தொடர்ந்து காலேஜில் இனியாவும் பாக்கியாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அசெய்ன்மென்ட் கொடுத்திருக்கிறாங்க அதுக்காக கேரளாவுக்கு போக வேண்டும் என்று இனியா சொல்ல பாக்கியா எப்பிடிப் போவ என்று சொல்ல டாடி கூட தான் அவர் கிட்ட சொல்லிட்டேன். அவர் நேர்ல வந்த பேசிறேன் என்று சொன்னாரு என்று சொல்கின்றார்.


பின்னர் அங்கு வரும் கோபியிடம் இனியா கேரளாவுக்கு போகும் விஷயத்தைப் பற்றிக் கேட்க, கோபி கட்டாயம் போகலாம் என்று சொல்கின்றார். தொடர்ந்து இரவு கோபி ராதிகா மயூவுடன் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மயூவை நாழளக்கு ஷாப்பிங் கூட்டிட்டு போகின்றேன் என்று சொல்லி பேசிட்டு இருக்கிறார். அந்த நேரம் போன் வர பேசிவிட்டு வந்து இருக்க ராதிகா என்ன ஆச்சு என்று கேட்கின்றார்.

அப்போது இனியாவை, கேரளாவுக்கு கூட்டிட்டு போகப் போறேன் என்று சொல்லச் ,ராதிகா எங்க கிட்ட எதுவும் சொல்ல மாட்டீங்களா என்று கேட்க கோபி விஷயத்தைச் சொல்ல, ராதிகாவின் அம்மா இதெல்லாம் சரியில்லை மாப்பிள்ளை போன வாரம் முழுக்க இனியாவை காலேஜில் சேர்க்கப் போறேன் என்று போனீங்க.இப்போ திரும்ப கேரளாவுக்கு போகப்போறீங்களா? ஏன் இனியாவுக்கு இரண்டு அண்ணன்கள் இருக்கு தாத்தா இருக்கிறாரு அவங்க யாரும் கூட்டிட்டு போகமாட்டாங்களா என்று கேட்கின்றார்.

அப்போது கடுப்பான கோபி நான் பாக்கியாவை மட்டும் தான் டிவோர்ஸ் பண்ணியிருக்கிறேன் என்னுடைய குடும்பத்தை இல்லை.எனக்கு எல்லாக் குழந்தைகளும் ஒன்று தான், என் குடும்பத்தை பார்க்க வேணாம் என்று சொல்லுறதுக்கு யாருக்கும் உரிமை இல்லை, இதைப் பற்றி இனிமேல் வேணாம் என்று கோபி கோபத்தில் கிளம்பிச் செல்கின்றார்.


பின்னர் கோபி இனியாவுடன் வீதியில் பேசிட்டு இருப்பதைப் பார்த்த ராதிகாவின் அம்மா ராதிகாவிடம் சொல்லிக் கொடுக்கின்றார்.இதனால் கோபி வந்ததும் ராதிகா அம்மா பேசினது தப்பு தான். உங்க குடும்பத்தை பற்றியே பேசிறீங்களே,எங்களை பற்றி எப்பவாவது பேசியிருக்கிறீங்களா என்று கேட்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement