• Sep 20 2024

ஆண்களை கிழித்துத் தொங்கவிட்ட பெண்கள்... விழுந்து விழுந்து சிரித்த கோபிநாத்... நீயா நானா ப்ரோமோ வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று 'நீயா நானா'. இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உண்டு. அந்த அளவிற்கு மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளது.


இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். தொடர்ந்து பல சுவாரஸ்யமான தலைப்பின் கீழ் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் "பெண் தோழிகள் மீது அதிக அக்கறை காட்டும் ஆண்கள், அதனை எரிச்சலாக பார்க்கும் பெண்கள்" என்ற தலைப்பின் கீழ் விவாதம் நடைபெற்றது.

இதில் ஆண்கள் தரப்பினர் பேசுகையில் "தன்னுடைய தோழிகளை பாதுகாப்பாக பார்த்து கொள்வதற்காக ஒரு குழுவாக நாங்கள் செயற்படுகிறோம்" எனக்கூறியிருந்தனர்.


இவ்வாறு பேசுகையில் கோபமடைந்த பெண்கள் "இப்படியெல்லாம் நடந்து கொள்வது இன்னொரு பெற்றோர் பார்ப்பது போல் இருக்கின்றது, அம்மா, அப்பாக்கு இல்லாத அளவிற்கு உங்களுக்கு என்ன அக்கறை" என பேசியுள்ளார்கள்.


பின்பு இளைஞர் ஒருவர் கூறுகையில் "தன்னுடைய தோழிக்கு எந்த விதமான தொந்தரவும் வந்துவிட கூடாது என தன்னாள் வர முடியாத நிலையில் தன்னுடைய நண்பருடன் அனுப்பி வைப்பேன்" எனக் கூறியுள்ளார். இந்த இளைஞன் கூறியதைக் கேட்ட கோபிநாத்திற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. இதனால் வயிறு குலுங்கி குலுங்கி சிரிக்கின்றார்.

இவ்வாறாக இந்த வாரம் வெளியான ப்ரோமோவோல் பெண்கள் ஆண்களை தாறுமாறாக கிழித்து தொங்க விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement