பெங்காலி சீரியலின் ரீமேக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர் தான் பாக்கியலட்சுமி. சுசித்ரா, சதீஷ், ரேஷ்மா என பலர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த தொடர் ஆரம்பத்தில் சாதாரண வரவேற்பை பெற்றாலும் இப்போது ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் சீரியலாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.
இத் தொடரில் பாக்கியா கணவனை பற்றி தெரிந்துகொண்டு எல்லாத்தையும் உதறித்தள்ளிவிட்டு தனது குடும்பத்திற்காக இப்போது தனது வழியில் பயணித்து வருகிறார்.
இவ்வாறு ஒரு புறம் இருக்க கோபி அவர் விரும்பியது போல் ராதிகாவை திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களது திருமணம் நடக்குமா, என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வம் ரசிகர்களிடம் இருக்க தற்போது புதிய ப்ரமோ ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது கோபியின் தந்தை மண்டபத்திற்குள் புகுந்து காலம் போன காலத்தில கல்யாண கோலத்தில் வந்து நிற்கிறாய்.வெட்கமாக இல்லை என கோபமாக கேட்க கோபி இல்லை என கூறுகிறார்.எல்லாரையும் அழவைச்சிட்டு நீ மட்டும் எப்படிடா சந்தோசமா இருப்பாய்.இந்த கல்யாணத்தை நான் நடக்க விடமாட்டேன் என மாலையை பிடித்து கோபியின் தந்தை அடிக்க ...வெளியே போய்ய என கோபி தந்தையை தள்ளிவிடுகின்றார்.
இந்நிலையில் திகைத்து போய் ராதிகா நிற்க..போதும் நிறுத்துங்க என பாக்கியா கூறி சமையல்கட்டுக்கு கூட்டிட்டு போறார் பாக்கியா.அதன் பிறகு இந்த வேலை எனக்கு முக்கியம் எதற்காகவும் இந்த வேலையை விட முடியாது இதை நம்பி தான் நான் இருக்கிறேன் எனக் கூற இத்துடன் இன்றைய ப்ரமோ முடிவடைகின்றது.
Listen News!