• Sep 20 2024

கமல் சேருடன் மூன்று முறை நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது- சிம்பு பற்றி தெரியாது -அரவிந்த் சுவாமியின் லேட்டஸ்ட் இன்டவியூ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரோஜா என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் அரவிந்சுவாமி. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

நீண்ட நாட்களாக தமிழில் என்ட்ரி கொடுக்காமல் இருந்த இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகியிருந்த தனி ஒருவன் திரைப்படத்தில் நெக்கடிவ் ரோலில் நடித்து அசத்தியிருந்தார்.


இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.அதில் அவர் கூறிய விடயங்கள் வைரலாகி வருகின்றது.

அந்த பேட்டியில் தொகுப்பாளர் ஒவ்வொரு நடிகரின் போட்டோக்களையும் காட்டி அவர்கள் குறித்து கேட்டிருந்தார். அப்போது கமல்ஹாசன் குறித்து கூறியதாவது கமல்சேருடன் நான் தெனாலி, அன்பே சிவம் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் நடிக்க முடியாமல் போச்சு என்று கூறினார்.


மேலும் விஜய்சேதுபதி பற்றி கேட்ட போது அவரை அடிக்கடி சந்திக்கிறதால ஒரே பேசிப்போம். இரண்டு பேருமே குளோஸ் பிரண்ட் ஆகிட்டேன்.அதே போல சிம்பு கூட அதிகமாக பழக்கம் இல்லை ஆனால் அவர் கூட இருந்தா ஜாலியா இருக்கும் என்று கூறினார்.

அதே போல ஜெயம் ரவி நல்ல மனிதர் நல்லா டான்ஸ் ஆடுவார் அவர் கூட தனி ஒருவன் திரைப்படம் நடிச்சது ஹப்பி தான். திரும்ப இரண்டு பேரும் சேர்ந்த நடிக்கிற மாதிரி படம் அமைஞ்சா கண்டிப்பா நடிப்பேன்.தனி ஒருவன் படத்தின் திரைப்படத்தையும் இயக்குநர் மோகன் ராஜாவால் மட்டுமே இயக்க முடியும் என்று கூறியிருந்தார்.


மேலும் இது தவிர இவர் இரண்டகம் என்னும் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement