• Sep 20 2024

சரஸ்வதியைத் திட்டிய கோதை- தமிழ் எடுத்த முடிவு- கலாய்த்துத் தள்ளிய வசு- Thamizhum Saraswathiyum Serial

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கோதை சரஸ்வதியை உள்ளே சென்று படுக்கச் சொல்கின்றார்.ஆனால் சரஸ்வதி இல்லை அத்தை நான் வெளிலையே படுத்துக் கொள்கின்றேன் என்கின்றார். அப்போது கோதை எதிர்த்தா பேசிறாய். இந்த மாதிரியான டைம்ல வெளியில் படுக்கக் கூடாது உள்ளே போய் மெத்தைல படு என்று அனுப்பி வைக்கின்றார்.


பின்னர் தமிழையும் உளளே சென்று சரஸ்வதியுடன் துாங்க சொல்கின்றார். இதனால் இருவரும் உள்ளே சென்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.அப்போது சரஸ்வதி இந்த மாதிரி டைம்ல நீங்க என் பக்கத்தில இருந்தால் எனக்கு சந்தோசமாக இருக்கும் என்பதால் தான் அத்தை நம்ம இரண்டு பேரையும் உள்ளே போய் படுக்க சொல்லியிருக்கிறாங்க என்று சொல்கின்றார்.

அப்போது தமிழ் உனக்கு என்ன வேணுமோ கேள் வாங்கித் தாறேன் என்று சொல்ல,சரஸ்வதி நீங்க எனக்கு பக்கத்தில இருக்கிறதை தவிர எனக்கு என்ன வேணும் என்று கேட்க இருவரும் ரொமான்ஸ் பண்ணுகின்றனர்.தொடர்ந்து எல்லோரும் துாங்கிக் கொண்டிருக்கும் போது வசுவின் குழந்தை அழ, சரஸ்வதி எழும்பி குழந்தையை துாக்கி வைத்து தாலாட்டுகின்றார்.


அப்போது தமிழ் எழும்பி பால் காய்ச்சி குழந்தைக்கு கொடுக்க இருவரும் குழந்தையை வைத்து கொஞ்சுகின்றனர்.அப்போது சரஸ்வதி சிரிப்பைப் பாருங்க அத்தை மாதிரியே சிரிக்கிறான்ல என்று சொல்ல தமிழும் அப்படித் தான் இருக்கு என்கின்றார்.அப்போது எல்லோரும் எழும்பி விடுகின்றனர்.வசு தன்னை எழுப்பி இருக்கலாம் தானே என்று கேட்கின்றார். சரஸ்வதி பரவாயில்லை வசு, என் குழந்தையை நீ வளர் உன் குழந்தையை நான் வளர்க்கிறேன் என்று கூறுகின்றார்.

தொடர்ந்து விடிந்ததும் வசு எல்லோருக்கும் டீ போட்டுக் கொடுக்கின்றார். ஆனால் டீ நன்றாக இல்லாததால் கார்த்திக்கும் நடேசனும் நக்கலடிக்கின்றனர். அத்தோடு சரஸ்வதி செம் துாக்கிக் கொண்டு வருவதைப் பார்த்த தமிழ் வெயிட் துாக்காத என்று சொல்ல,வசு தமிழை கலாய்க்கின்றார்.


பின்னர் தமிழே காலை சாப்பாடு செய்து பரிமாறுவதோடு சரஸ்வதியை கவனித்துக் கொள்கின்றார்.அத்தோடு நீ இனிமேல் செட்டுக்கெல்லாம் போகக் கூடாது என்று சரஸ்வதியிடம் சொல்கின்றார்.முதலில் மறுப்புத் தெரிவித்த சரஸ்வதி பின்னர் சம்மதிக்கின்றார். கம்பனிக்கு போனதும் நமச்சி சரஸ்வதி இந்த மாதிரியான டைம்ல சந்தோசமாக வைச்சிருக்கோனும். அவ எது ஆசைப்பட்டாலும் செய்து கொடு என்கின்றார்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement