• Sep 21 2024

வசுவின் குழந்தையை சரஸ்வதி தூக்குவதைப் பார்த்து சந்தோஷப்பட்ட கோதை- கார்த்திக்கின் குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அற்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

வசுவின் குழந்தைக்கு பெயர் வைக்கும் பங்சனுக்கு போகலாமா வேணாமா என்று சரஸ்வதி யோசிச்சுக் கொண்டிருக்க தமிழும் என்ன செய்வது என்று தெரியல என்று நமச்சியிடம் கூற நமச்சி கவலைப்படாதீங்க அந்த பொண்ணு கட்டாயம் வரச் சொல்லியிருக்கு நீங்க போகல என்றால் என்ன நினைக்கும் அந்த புள்ளைக்கக போகலாம் தானே என்று சொல்கின்றார்.


அந்த நேரம் பார்த்து வசு போன் பண்ண சரஸ்வதி பங்சனுக்கு வரல என்று சொல்ல வசு உங்களுக்கு குழந்தை பிறந்து நாங்க வரல என்றால் நீங்க ஏத்துப்பீங்களா, நிங்க வந்து குழந்தையை துாக்கலனா நாங்க பெயர் வைக்க மாட்டோம் என்று சொல்கின்றார்.இதைக் கேட்டு சரஸ்வதி சரி நாங்க வாறோம் என்று சொல்ல தமிழும் நமச்சியும் சந்தோஷப்படுகின்றனர்.

பின்னர் எல்லோரும் வசு வீட்டுக்கு பங்சனுக்காக கிளம்பிப் போக வசுவின் தம்பி எல்லோரையும் வரவேற்கின்றார். தொடர்ந்து நேரம் ஆகியும் பங்சன் தொடங்காததால் ராகினி, எல்லோரும் வந்தாச்சு தானே இப்போ ஆரம்பிக்கலாம் தானே என்று கேட்க வசு சரஸ்வதியும் மாமாவும் வரட்டும் அவங்க வந்தால் தான் பங்சன் ஆரம்பிப்போம் என்று சொல்ல இருவரும் வருகின்றனர்.

இதனால் சந்தோஷப்பட்ட வசு இருவரையும் உள்ளே அழைக்க கோதையும் இருவரையும் வரவேற்கின்றார்.பின்னர் வசு குழந்தையை சரஸ்வதியிடம் கொடுக்க சரஸ்வதி வேண்ட மறுக்க பின்னர் வாங்கிக் கொஞ்ச கோதை சந்தோஷப்படுகின்றார். தமிழைப் பெயர் வைக்க சொல்ல தமிழ் அந்த வீட்டில யார் எல்லாத்தையும் முன்னுக்கு நின்று செய்வாங்களோ அவங்ககிட்டையே பெயரையும் வைக்க சொல்லுங்க என்று சொல்ல கோதையும் சந்தோஷமாக குழந்தையை வேண்டி மகிழன் எனப் பெயர் வைக்கின்றார். 


தொடர்ந்து வசு தமிழையும் கோதையையும் எப்படியாவது பக்கத்தில இருத்தி சாப்பிட வைக்கணும் என்று தனது மாமா மற்றும் அம்மாவுடன் சேர்ந்து பிளான் பண்ணுகின்றார்.அதே போல பக்கத்தில உட்கார வைத்து சாப்பிட வைக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.



Advertisement

Advertisement