• Sep 20 2024

நடேசனுக்குத் தெரியாமல் ராகினி வளைகாப்புக்கு போன கோதை- தமிழை பழிவாங்க அர்ஜுன் போட்ட திட்டம்- Thamizhum Saraswathiyum Serial

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும்.அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ராகினியிடம் போன் பேசிட்டு இருந்த கோதையை திட்டுகின்றார் நடேசன். உங்களுக்கு ஒரு தடவை சொன்னால் புரியாதா என்கின்றார். தொடர்ந்து போனை வாங்கி ராகினியையும் திட்டுகின்றார்.என்னை நீ அப்பா என்று கூப்பிடாத அப்பிடிக் கூப்பிட உனக்கு வெட்கமாக இல்லையா என்று கண்டபாட்டுக்குத் திட்ட ராகினி அழுகின்றார்.


தொடர்ந்து ராகினி அர்ஜுனிடம் சென்று இந்த வளைகாப்பு நிகழ்வு வேணாம் எங்க வீட்டில இருந்து யாரும் வரமாட்டாங்க,அப்பா என்னையும் போன்ல நல்லாத் திட்டிட்டாரு என்று சொல்ல அர்ஜுன் கவலைப்படாத ராகினி நாம போகலாம் அவங்க கட்டாயம் வருவாங்க நீ போய் ரெடி ஆகு என்று சொல்லி விட்டு தன்னுடைய குடும்பத்தாரிடம் அவங்களை எப்படியாவது வர வைக்க என் கிட்ட ஒரு ஐடியா இருக்கு என்கின்றார்.

பின்னர் அபி கிச்சனுக்குப் போவதைப் பார்த்த அர்ஜுனின் மாமா பரிதாபமாகப் பேசுவது போல அர்ஜுன் கிட்ட பேசுகின்றார். அப்போது அர்ஜுனும் ராகினிக்கு பிடிக்காத இந்த வளைகாப்பை கட்டாயம் பண்ணனுமா என்று தான் இருக்கு, அவங்க வீட்டுக்காரங்களை வைத்து பண்ணினால் சந்தோசப்படுவாள் என்று பார்த்தால் இப்போ முடியாது போல இருக்கே என்று கவலைப்படுவது போல நடிக்க அபியும் அதைப் பார்த்து விட்டு சரஸ்வதிக்கு போன் பண்ணி சொல்கின்றார்.

இதனால சரஸ்வதி கோதையிடம் சென்று வளைகாப்பு நடக்குமா என்று தெரில, நாம அங்க போகலாமே அத்தை என்று சொல்லி கோதையையும் வசுவையும் கூட்டிக் கொண்டு ராகினியின் வளைகாப்பு நடக்கும் இடத்திற்குப் போகின்றனர்.பின்னர் அர்ஜுன் அடியாட்களை கோயிலுக்கு வரவைத்துள்ளார். அத்தோடு தமிழை வரவைக்க கோதை வளைகாப்புக்கு வந்த விஷயதை தனது கம்பெனியில் வேலை செய்யும் நபர் மூலம் பற்ற வைக்கின்றார்.


இதனைக் கேள்விப்பட்ட தமிழ் நடேசன் கார்த்திக் நமச்சி எல்லோரும் கோதையை தடுத்து நிறுத்த கோயிலுக்கு வருகின்றனர்.மறுபுறம் கோயிலுக்கு வந்த கோதை சரஸ்வதி வசு எல்லோரையும் அர்ஜுன் வரவேற்க சரஸ்வதி அவனைத் திட்டுகின்றார்.  இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement