விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும்.இதில் தீபக் மற்றும் நக்ஷத்திரா ஆகியோர் ஹீரோ,ஹீரோயினாக நடித்து வருகின்றனர்.
குடும்ப பிரச்சனையால் தமிழ் மற்றும் சரஸ்வதி வீட்டை விட்டு வெளியேறி தனியாக கம்பெனி தொடங்கி முன்னுக்கு வர முயற்சித்து வருகின்றனர்.தமிழின் அப்பாவும் தற்பொழுது தமிழ் மீது தப்பு இருக்க வாய்ப்பில்லை. அர்ஜுன் தான் ஏதோ வில்லத்தனம் செய்திருக்கின்றார் என்று சந்தேகப்படுகின்றார்.
இதனால் ராகினியை அழைத்து தமிழ் அர்ஜுனைக் கத்தியால் குத்தியதைப் பார்த்தியாம்மா என்று கேட்க, ராகினி தமிழ் அண்ணா கத்தியை எடுக்கும் போது தான் கண்டேன் என்று சொல்ல அதை மறைந்து நின்று கேட்ட அர்ஜுன் அதிர்ச்சியடைந்து நைசா ரேகினியை அந்த இடத்திலிருந்து கூட்டிச் செல்கின்றார்.
இதனைப் பார்த்த ராகினியின் அப்பா அர்ஜுனின் நடவடிக்கைகளில் சந்தேகப்படுகின்றார். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்
Listen News!