தமிழ் சினிமாவில் 90களில் நகைச்சுவை கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ஷர்மிலி. இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம் என ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 90’ஸ் குழந்தைகளுக்கு இவரை நன்றாகவே தெரிந்திருக்கும். நடிகையாவதற்கு முன்னர் இவர் க்ரூப் டான்ஸராக இருந்தார்.
அதுமட்டுமல்லாது 'ராக்காயி கோயிலிலே' படத்தில் வரும் இவரின் லாட்டரி சீட்டு காமெடியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அப்படத்தில் இவர் கவுண்டமனிக்கு ஜோடியாக நடித்திருப்பார். பின்னர் அவருடன் இணைந்து 27 படங்களில் நடித்தார்.
படங்களில் பிசியாக இருந்து வந்த இவர் தனது 40ஆவது வயதில் ஐடி துறையில் பணிபுரியும் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார். இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் இவர் பல விடயங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறுகையில் "நான் பல வருடங்களுக்கு பிறகு எனது 48வயதில் கர்ப்பமாக இருப்பது உண்மை தான், அதனால் நான் கொஞ்சம் கவனமாக இருக்கிறேன். இளம் வயதில் குழந்தையை பெற்றுக் கொண்டிருந்தால் எப்படி அதனை வளர்த்திருப்பேன் என எனக்குத் தெரியல, இப்போது கர்ப்பமாக இருப்பதால் குழந்தையை நன்றாக வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது "எனது வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் தாமதமாக தான் கிடைத்தது, குழந்தையும் 48 வயதில் தான் கிடைத்துள்ளது" என்றார். மேலும் தனது கணவர் தற்போது நீதிபதிக்கு படித்து கொண்டிருப்பதாகவும் ஷர்மிலி அப்பேட்டியில் தெரிவித்தார்.
Listen News!