• Sep 20 2024

ஜி.பி. முத்துவிடம் அசீம் கேட்ட HELP...கடைசியில் இப்படி கேட்டுவிட்டாரே..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6 தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.மேலும் இதில் வெற்றி பெறப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.100 நாட்களை கடந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் தற்போதைய சீசன் 6 ஃபைனலை நெருங்கியுள்ளது. ஆது்துர்ட கடந்த வாரம் வழக்கம்போல போட்டியில் கமல் தோன்றி இருந்தார். அப்போது கடந்த வாரம் நடந்தவை குறித்து கமல் பேசியிருந்தார். அப்போது எவிக்ஷன் நேரத்தில் ADK வெளியேறுவதாக அறிவித்தார் கமல்.

இதனிடையே, ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா,  நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர். இதனால் பிக்பாஸ் வீடு சுவாரஸ்யமாக மாறியுள்ளது. அத்தோடு இது ஒருபக்கம் இருக்க, அவ்வப்போது போட்டியாளர்களிடையே வாக்குவாதங்களும் ஏற்பட்டு வருகின்றது.



இவ்வாறுஇருக்கையில், ரச்சிதா, ஆயிஷா ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு திரும்பியுள்ளனர். போட்டியாளர்கள் அனைவரும் இருவரையும் உற்சாகமாக வரவேற்று இருந்தனர். இந்த சூழ்நிலையில் வீட்டுக்குள் பண மூட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. ஃபைனலிஸ்ட் போட்டியாளர்களில் யார் வேண்டுமானாலும் அதனை எடுத்துக்கொண்டு வெளியேறலாம் என பிக்பாஸ் அறிவித்திருந்தார். பின்னர் கதிர் பணமூட்டையுடன் வெளியேறுவதாக அறிவித்து அனைவர்க்கும் அதிர்ச்சி கொடுத்தார்.



மேலும் இந்த சூழ்நிலையில் தற்போது மீண்டும் பணப் பெட்டி அறிமுகமாகியுள்ளது. ஃபைனலிஸ்ட் போட்டியாளர்களில் யார் வேண்டுமானாலும் அதனை எடுத்துக்கொண்டு வெளியேறலாம் என இப்போதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டி குறித்த சுவாரஸ்யம் அதிகரித்திருக்கிறது. அத்தோடு இந்த சூழ்நிலையில் GP முத்துவிடம் பேசிக்கொண்டிருக்கிறார் அசீம்.



அப்போது, பிக்பாஸ் போட்டி குறித்து நேர்காணல் கொடுக்க கூடாது என தன்னிடம் சொல்லப்பட்டதாகவும் அதனாலேயே தான் ரீல்ஸ் போடாமல் இருப்பதாகவும் சொல்கிறார் முத்து.எனினும்  அப்போது அசீம்,"ஒருவேளை ரீல்ஸ் போடுற மாதிரி சந்தர்ப்பம் வந்துச்சுன்னா எனக்கு சப்போர்ட் பண்ணுங்க" என்கிறார்.

Advertisement

Advertisement