டிக் டாக் செயலி மூலம் தன்னுடைய தனித் திறமையால் பிரபலமானவர் தான் ஜி.பி.முத்து . தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி கருப்பட்டிக்குப் புகழ் பெற்ற ஊர். அந்த புகழையும் தாண்டி இப்போது உடன்குடி என்றாலே ஜி.பி.முத்து தான் நம் நினைவுக்கு வருகிறார். இவர் பிக் பாஸில் காலடி எடுத்து வைத்ததும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி விட்டார்.
இவர் 29.3.1985ல் பிறந்தார். முழுபெயர் ஜி.பேச்சி முத்து. 4பிள்ளைகள், மனைவியுடன் வசித்து வரும் இவர் ஆரம்பகாலத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டுள்ளார். பின்னர் டிக் டாக் வந்ததும் கொரோனா காலத்தில் சிறு சிறு வீடியோ போட்டு வந்துள்ளார். அதில் இவரது நகைச்சுவையான நாட்டுப்புற வசனங்கள் ரசிகர்களைக் கவர ஆரம்பித்தன. செத்தப்பயல, பேயில போவான், நாரப்பயல என்ற வசனங்கள் தான் இவரது பஞ்ச் எனலாம்.
இதை இவர் சொல்லும் விதம் அந்தத் தொனி, முகபாவனைகள்…பாஷையே தெரியாதவரையும் சிரிக்க வைத்து விடும். அதன் பிறகு யூடியூபில் இவர் தனது ரசிகர்கள் அனுப்பும் கடிதங்களைப் பிரித்துப் படித்து வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். வருமானம் வர வர இவரது ரேஞ்சே வேற லெவலுக்குச் சென்றுவிட்டது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார், ஆனால் ஒரு வாரத்திற்கு மேல் அவரால் வீட்டில் தாக்குபிடிக்க முடியவில்லை, வெளியே வந்துவிட்டார்.அதன்பிறகு அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வந்தார்.
எனது பரம்பரையிலேயே முதல் நபராக கார் வாங்கியது நான் தான் என கடந்த 2021ம் ஆண்டு செகண்ட் ஹேண்ட் கார் வாங்கியபோது வீடியோ வெளியிட்டார்.தற்போது அவர் புதிதாக வெள்ளை நிற கார் ஒன்றை வாங்கிய வீடியோவை யூடியூப்பில் பதிவிட்டுள்ளார். இந்த வெள்ளை நிற Kia காரின் விலை 12 முதல் 15 லட்சம் வரை விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!