• Sep 20 2024

மீண்டும் தாத்தாவான ரஜினிகாந்த்- சௌந்தர்யாவுக்கு குழந்தை பிறந்தாச்சு- குவியும் வாழ்த்துக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவரே தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்திருப்பதோடு இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருப்பதும் தெரிந்ததே.


அதே போல இரண்டாவது மகள் விஷாகன் என்பவரைத் திருமணம் செய்திருப்பதோடு இவர்களுக்கு வேத் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.இந்த நிலையில் சௌந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினைப் போட்டுள்ளார். அதில் குறிப்பிடட்டதாவது 

, “கடவுளின் அபரிமிதமான கருணையுடனும், எங்கள் பெற்றோர் ஆசீர்வாதத்துடனும் 🙏🏻😇விஷாகன் (கணவர்), வேத் (முதல் குழந்தை) மற்றும் நானும் இன்று 11/9/22 வேதின் தம்பி வீர் ரஜினிகாந்த் வணங்காமுடியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் .. வீர் ஆசிர்வதிக்கப்பட்ட எங்கள் மருத்துவருக்கு நன்றி” என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதைப் பார்த்த ரசிகர்கள், நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் தாத்தா ஆகியிருக்கிறார் என நெகிழ்ந்துபோய் ரஜினிகாந்த்துக்கும், இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த்துக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement