• Sep 21 2024

புலம்பித் தள்ளும் ஜனனி.... ஆறுதல் சொல்லும் சக்தி... நினைச்சதை முடிச்ச குணசேகரன்... சூடு பிடிக்கும் 'எதிர்நீச்சல்' எபிசோட்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ரசிகர்களின் விறுவிறுப்பைத் தூண்டியவாறு அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில் என்ன நடந்துள்ளது என்பதை பார்ப்போம்.

அந்தவகையில் கம்பெனியில் வைத்து ஜீவானந்தம் ஆட்கள் குணசேகரனை குண்டுக்கட்டாக தூக்கி வெளியே போடுகின்றார்கள். இதனையடுத்து போலீசில் புகார் கொடுக்க குணசேகரன் கும்பல் செல்ல முன்னர் முன்னர் புகார் கொடுத்து விட்டார். போலீஸ் நிலையத்திலும் குணசேகரனுக்கு அறிவுரை வழங்குகின்றனர்.


பின்னர் அப்பத்தாவின் ரூமுக்கு சென்ற ஜனனி "நாம தோத்து போயிட்டோம்  அப்பத்தா. நீங்க என்ன எல்லாம் செய்யணும் என நினைச்சீங்க அது எதுவுமே இனி நடக்காது. அந்த ஜீவானந்தம் நல்லவன் இல்லை" என கூறி அழுகின்றார். பதிலுக்கு சக்தி "நாம தோத்து போகல இப்ப தான் நமக்கு என்ன விஷயம் என  கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வந்து இருக்கு. இதை வைத்து அடுத்து என்ன பண்ணலாம் என யோசிக்கலாம், பீல் பண்ணாதே" என ஜனனிக்கு ஆறுதல் கூறுகின்றார்.

மறுபுறம் குணசேகரன் புலம்பிக் கொண்டிருக்கின்றார். கோபத்தில் ஆட்கள் செட் பண்ணும் அளவிற்கு முடிவெடுக்கின்றார். அதற்கு ஆடிட்டர் "ஆத்திரத்துல எதுவும் பண்ணாதீங்க. எதுவும் செய்றதுக்கு முன்னாடி யோசிச்சு செய்யுங்க" என அட்வைஸ் பண்ணுகின்றார்.

மேலும் "ஜீவானந்தம் உங்களை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு தான் இதையெல்லாம் செய்திருக்கின்றார், இந்த பிரச்சனையில் இருந்து நாம விடுபடணும் என்றால் "உங்க அப்பத்தா எழுந்து வந்து உண்மையை சொல்லி நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் வீட்டு பொம்பிளைகளை வைத்து இந்த காரியத்தை சாதிக்க முயற்சி செய்யுங்க" எனவும் கூறுகின்றார்.

பதிலுக்கு குணசேகரன், ஜனனியால போன சொத்து அவளாலேயே திரும்பி வர வைக்குறேன் எனக் கூறி சபதமெடுக்கின்றார். பின்னர் தள்ளாடிக்கொண்டே வீட்டுக்கு வந்த குணசேகரன் வீடடை அண்ணாந்து பார்த்து "நான் கட்டின இந்த கனவு கோட்டை என்னை விட்டு போயிடுமா என பயமா இருக்கு" எனக் கூறி அழுகின்றார். பின்னர் கதிர், ஞானம் அவரை பிடித்து உள்ளே அழைத்துச் செல்கின்றனர்.


இதனைத் தொடர்ந்து குணசேகரன் "அந்த ஜீவானந்தம் வரும் வரைக்கும் நீ என்னை எப்படி எல்லாம் பேசுனா. ஆனால் ஜீவானந்தமே சொல்லிட்டான் உனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று, எனவே நானும் உன்னை நம்புகிறேன். ஆனால் அப்பத்தாவோட கையெழுத்து மட்டும் அவன்கிட்ட எப்படி போச்சு" எனக் கேட்க்கின்றார்.

பின்னர் "ஒருவேளை அப்பத்தாவையும் துப்பாக்கியை மிரட்டி அந்த ஜீவானந்தம் கையெழுத்து வாங்கி இருப்பானோ. அப்பவே அப்பத்தா எல்லா உண்மையையும் சொல்லியிருந்தால் சொத்து போகாமல் பார்த்து இருந்து இருக்கலாம்" எனவும் புலம்புகின்றனர்.


மறுபுறம் நந்தினி மீதி 60% ஷேர் உங்க பேர்ல தானே இருக்கு பிறகு என்ன எனக் கேட்கிறார். அதற்கு, ஒண்ணுமே கிடையாது. இருக்கறதில் அதிகமான ஷேர் அப்பத்தாவுடையது தான் அதை ஜீவானந்தம் எடுத்துக்கிட்டேன். இனிமேல் அவன் வைச்சது தான் நம்ம எல்லாருக்கும் சட்டம். 

ஆனால் இந்த சொத்து நம்ம கையை விட்டு கடைசி வரைக்கும் போக கூடாது. அப்பத்தாவுக்கு சேர வேண்டிய 40% ஷேரையும் நான் கொடுத்துடுறேன். எவனோ தெருவுல போறவனுக்கு போறத விட அப்பத்தாவுக்கு அதைக் கொடுக்கலாம். நீங்க தான் மா ஏதாவது பண்ணனும் எனக் கூறுகின்றார் குணசேகரன்.

இதனையடுத்து நந்தினி "நாங்க பண்றோம் மாமா" என்கிறார். இதனால் தான் நினைத்ததை சாதித்ததாக குணசேகரன் எண்ணுகின்றார். இவ்வாறாக இந்த எபிசோட் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement