சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடு ஆதிரையை கரிகாலன் வீட்டிற்கு அழைத்துச் சென்று வது கட்டாயமாக விட்டு விட்டு குணசேகரன் வீட்டுக்கு வந்தார்.
விசாலாட்சி அழுது புலம்ப குணசேகரன் இனிமே எல்லாம் உங்க நாடகம் என்கிட்ட செல்லுபடி ஆகாது என சொன்ன நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஆதிரை எங்க வாழ்க்கையை தீர்மானிக்கிற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது என ஈஸ்வரி குணசேகரனை எதிர்த்து கேள்வி கேட்கிறார். அதன் பிறகு ஜனனி மற்றும் சக்தி வீட்டுக்கு வர குணசேகரன் தோல்வியை ஒத்துக்கிட்டு மன்னிப்பு கேளு என சொல்ல தோத்துப்போனது நீங்கதான் என ஜனனி அதிர்ச்சி கொடுக்கிறார்.
அதைத்தொடர்ந்து கதிர் ஜனனியிடம் சண்டை போட போக சக்தி கதிரை பளார் என அறைந்து என் பொண்டாட்டியை யாராவது ஏதாவது பேசினா என குணசேகரனை எச்சரிக்கிறார். இதனால் மொத்த குடும்பமும் குணசேகரனுக்கு எதிராக திரும்ப இனி சீரியல் கதைக்களம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!