சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியல் தான் 'எதிர்நீச்சல். இந்த சீரியல்தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு நாளில் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார்.
மேலும் இந்த சீரியலானது அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதையாக அமைந்துள்ளது. இதில் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருக்கிறது.
இந்த தொடரில் ஆதி குணசேகரன் ஆரம்பத்தில் சாருபாலா மீது விருப்பம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொள்ள மிகவும் விருப்பப்படுவார். ஆனால், அவர் படிக்காதவன் என்பதால் அவரை திருமணம் செய்துகொள்ள சாருபாலா மறுத்துவிடுவார்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான எபிசோடு ஒன்றில் சாருபாலா மற்றும் ஆதி குணசேகரன் இருவரும் சந்தித்து பேசி இருப்பார்கள். அதில் குணசேகரன் சாருபாலாவிடம் ரொமான்ஸாகப் பேசுவது போல் அமைந்திருக்கும்.
இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
When she text you after so many years for no reason pic.twitter.com/JDQB9Mtty9
Listen News!